சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

Feb 09, 2026,05:40 PM IST

சென்னை : சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான பனிமூட்டம் (Fog/Mist) காணப்படலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த ஒரு வாரத்திற்கான தமிழக வானிலை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு காலை நேர பனிமூட்டம் தொடரும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




அதிகபட்ச வெப்பநிலை 30-32 டிகிரி செல்ஷியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-22 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கக்கூடும். சில இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் நிலவும் பனிமூட்டம் காரணமாகக் Visibility (பார்வைத்திறன்) குறையக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மழை பொழிவிற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே சென்னையில் காலை மற்றும் மாலையில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு மாறாக பகல் வேளையில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேர பயணம் மேற்கொள்பவர்கள், அதிகாலை மற்றும் மாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கோடை வெப்பம் முன் கூட்டியே துவங்கி வருவது தெரிகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இனி குளிர் படிப்படியாக குறைய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்