சென்னை: 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்விற்கான அட்டவணை வெளியாகியிருந்தது. நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் துவங்கி 23ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை என்றும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரையாண்டு தேர்விற்கும் மாணவர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். டிசம்பர் 21ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கிடிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது.
இதனையடுத்து டிம்பர் 24ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 நாட்களுக்குள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையும் அடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}