சென்னை: 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்விற்கான அட்டவணை வெளியாகியிருந்தது. நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் துவங்கி 23ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை என்றும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரையாண்டு தேர்விற்கும் மாணவர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். டிசம்பர் 21ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கிடிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது.
இதனையடுத்து டிம்பர் 24ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 நாட்களுக்குள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையும் அடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}