"மழை வருது.. மழை வருது".. இன்று 9 மாவட்டங்களில் சிலுசிலுன்னு!

Sep 04, 2023,02:14 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று பரவலாக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பம் குறைந்து தற்போது குளிர்ச்சி நிலவுகிறது. 



இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று பரவலாக ஒன்பது மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருப்போரூரில்  அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழையும், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி ,திண்டுக்கல் ,தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உட்பட ஆகிய 9 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்