ஓய்வை அறிவித்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு

May 29, 2023,12:58 PM IST
டெல்லி : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2023 பைனலுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அம்பதி ராயுடு.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நேற்று (மே 28) நடைபெற இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் டே என சொல்லப்படும் இன்று (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் ஐபிஎல் 2023 பைனலை முன்னிட்டு, சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், இரண்டு சிறப்பான அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 பைனல்கள், 5 கோப்பைகள். ஆறாவது கோப்பை இன்று இரவு கிடைக்கும் என நம்புகிறேன். 

அத்தோடு இந்த பயணத்தில் இருந்து விலகுகிறேன். இன்று இரவு விளையாட உள்ள போட்டி ஐபிஎல் விளையாட்டில் எனது கடைசி போட்டி என முடிவு செய்துள்ளேன். நிஜமாகவே இந்த தொடரை மிகவும் ரசித்தேன். அனைவருக்கும் நன்றி. இப்போது உங்களின் தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் தொடரில் தனது பயணத்தை துவக்கினார் ராயுடு. 2017 வரை அவர் பங்கேற்ற அணி மூன்று முறை டைட்டில் வென்றது. 2018 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ராயுடு, தற்போது வரை விளையாடி வருகிறார். இவர் வந்த பிறகு சென்னை அணி 2 கோப்பையை வென்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்