மும்பை: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சட்டேஸ்வர் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார். அஜிங்கியா ரஹானே துணைக் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ம் தேதி டொமினிக்காவில் உள்ள வின்சர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சட்டேஸ்வர் பூஜாரா நீக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பேக்கப் தொடக்கஆட்டக்காரராக சேர்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல முகேஷ் குமாரும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், ஒரு நாள் போட்டிகளில் ஹர்டிக் பான்டியாவும் துணைக் கேப்டனாக செயல்படுவார்கள்.
ஒரு நாள் அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் இடம் பிடித்துள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கியா ரஹானே, கே.எஸ். பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஸார் படேல், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார்யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்டிக் பான்ட்யா, ஷர்துள் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}