மும்பை: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சட்டேஸ்வர் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார். அஜிங்கியா ரஹானே துணைக் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ம் தேதி டொமினிக்காவில் உள்ள வின்சர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சட்டேஸ்வர் பூஜாரா நீக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பேக்கப் தொடக்கஆட்டக்காரராக சேர்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல முகேஷ் குமாரும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், ஒரு நாள் போட்டிகளில் ஹர்டிக் பான்டியாவும் துணைக் கேப்டனாக செயல்படுவார்கள்.
ஒரு நாள் அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் இடம் பிடித்துள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கியா ரஹானே, கே.எஸ். பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஸார் படேல், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார்யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்டிக் பான்ட்யா, ஷர்துள் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}