மும்பை: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சட்டேஸ்வர் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார். அஜிங்கியா ரஹானே துணைக் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ம் தேதி டொமினிக்காவில் உள்ள வின்சர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சட்டேஸ்வர் பூஜாரா நீக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பேக்கப் தொடக்கஆட்டக்காரராக சேர்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல முகேஷ் குமாரும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், ஒரு நாள் போட்டிகளில் ஹர்டிக் பான்டியாவும் துணைக் கேப்டனாக செயல்படுவார்கள்.
ஒரு நாள் அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் இடம் பிடித்துள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கியா ரஹானே, கே.எஸ். பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஸார் படேல், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார்யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்டிக் பான்ட்யா, ஷர்துள் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}