புதுடில்லி : காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி வீரர் வில்லியம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியன்சன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் ஆமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது, 13 வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை கேட்ச் செய்வதற்காக முயற்சித்த போது கீழே விழுந்த போது வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர ஓய்வு மற்றும் சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் சாய் சுதர்சனை குஜராத் அணி களமிறக்கியது. இது குஜராத் அணி வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அதே சமயம் இந்த தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக கருதுவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், மிக விரைவில் அவர் மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என நம்புவதாகவும் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் விக்ரம் சோலன்கி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்விற்காக வில்லியம்சன் அடுத்த ஒரு வாரத்தில் நியூசிலாந்து புறப்பட உள்ளார். அங்கு தனது வீட்டில் அவர் சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி
2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!
பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!
பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?
Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி
உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்
கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு
{{comments.comment}}