புதுடில்லி : காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி வீரர் வில்லியம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியன்சன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் ஆமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது, 13 வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை கேட்ச் செய்வதற்காக முயற்சித்த போது கீழே விழுந்த போது வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர ஓய்வு மற்றும் சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் சாய் சுதர்சனை குஜராத் அணி களமிறக்கியது. இது குஜராத் அணி வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

அதே சமயம் இந்த தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக கருதுவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், மிக விரைவில் அவர் மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என நம்புவதாகவும் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் விக்ரம் சோலன்கி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்விற்காக வில்லியம்சன் அடுத்த ஒரு வாரத்தில் நியூசிலாந்து புறப்பட உள்ளார். அங்கு தனது வீட்டில் அவர் சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}