புதுடில்லி : காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி வீரர் வில்லியம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியன்சன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் ஆமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது, 13 வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை கேட்ச் செய்வதற்காக முயற்சித்த போது கீழே விழுந்த போது வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர ஓய்வு மற்றும் சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் சாய் சுதர்சனை குஜராத் அணி களமிறக்கியது. இது குஜராத் அணி வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

அதே சமயம் இந்த தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக கருதுவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், மிக விரைவில் அவர் மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என நம்புவதாகவும் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் விக்ரம் சோலன்கி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்விற்காக வில்லியம்சன் அடுத்த ஒரு வாரத்தில் நியூசிலாந்து புறப்பட உள்ளார். அங்கு தனது வீட்டில் அவர் சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}