புதுடில்லி : காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி வீரர் வில்லியம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியன்சன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் ஆமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது, 13 வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை கேட்ச் செய்வதற்காக முயற்சித்த போது கீழே விழுந்த போது வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர ஓய்வு மற்றும் சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் சாய் சுதர்சனை குஜராத் அணி களமிறக்கியது. இது குஜராத் அணி வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

அதே சமயம் இந்த தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக கருதுவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், மிக விரைவில் அவர் மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என நம்புவதாகவும் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் விக்ரம் சோலன்கி தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்விற்காக வில்லியம்சன் அடுத்த ஒரு வாரத்தில் நியூசிலாந்து புறப்பட உள்ளார். அங்கு தனது வீட்டில் அவர் சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}