டிஜிட்டல் பண பரிவர்த்தனை.. டாப் 5 நாடுகளில் இடம்பிடித்த இந்தியா

Jun 10, 2023,02:58 PM IST

டில்லி : டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் உலகின் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக இந்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 2022 ம் ஆண்டில் மட்டும் 89.5 மில்லியன் டிஜிட்டல் பணபரித்தனை நடந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

புள்ளிவிபரங்களின் படி, 2022 ம் ஆண்டில் உலகில் நடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது. மற்ற நான்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம் வெகுவாக முன்னேறி உள்ளது. 



உலகில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் 2வது இடத்திலும் (29.2 மில்லியன்), சீனா 3வது இடத்திலும் (16.5 மில்லியன்), தென் கொரியா 4வது இடத்திலும் (8 மில்லியன்) உள்ளன. கிராமப் புறங்களிலும் கூட டிஜிட்டல் பணபரிவர்த்தனை இந்தியாவில் அதிகம் பயன்படுத்த துவங்கியதால் இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணமும் குறைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. புதிய முறைக்கு இந்திய மக்கள் மாறி உள்ளதாகவும், இதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும் ஆர்பிஐ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்