டிஜிட்டல் பண பரிவர்த்தனை.. டாப் 5 நாடுகளில் இடம்பிடித்த இந்தியா

Jun 10, 2023,02:58 PM IST

டில்லி : டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் உலகின் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக இந்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 2022 ம் ஆண்டில் மட்டும் 89.5 மில்லியன் டிஜிட்டல் பணபரித்தனை நடந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

புள்ளிவிபரங்களின் படி, 2022 ம் ஆண்டில் உலகில் நடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது. மற்ற நான்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம் வெகுவாக முன்னேறி உள்ளது. 



உலகில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் 2வது இடத்திலும் (29.2 மில்லியன்), சீனா 3வது இடத்திலும் (16.5 மில்லியன்), தென் கொரியா 4வது இடத்திலும் (8 மில்லியன்) உள்ளன. கிராமப் புறங்களிலும் கூட டிஜிட்டல் பணபரிவர்த்தனை இந்தியாவில் அதிகம் பயன்படுத்த துவங்கியதால் இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணமும் குறைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. புதிய முறைக்கு இந்திய மக்கள் மாறி உள்ளதாகவும், இதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும் ஆர்பிஐ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு

news

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?

news

நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாற்றத்தை நோக்கி ஒரு சிந்தனை!

news

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

news

வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!

news

விரி பொழில் சூழ் குன்றையார்.. விறன்மிண்ட நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு

news

Bread Halwa .. வீட்டில் பிரெட் இருக்கா.. எடுத்துட்டு வாங்க.. ஸ்வீட்டா ஹல்வா பண்ணுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்