சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்காவிட்டால் இந்தியா பிரியும்.. ஒபாமா

Jun 23, 2023,10:03 AM IST

வாஷிங்டன்: நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கத் தவறினால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிப்பேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.


சிஎன்என் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியின்போதுதான் இவ்வாறு அவர் கூறினார். அவரது  இந்தப் பேட்டி அமெரிக்கா முழுவதும் வைரலாகியுள்ளது. இந்தியாவிலும் பலர் இந்தப் பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.




சிஎன்என் தொலைக்காட்சியின் கிறிஸ்டியன் அமன்போர்-க்கு பராக் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் இந்தியா தொடர்பாக கூறியுள்ளதாவது:


அமெரிக்க  அதிபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது என்பது சிறப்பானது. அப்படிப்பட்ட சந்திப்பினோது, இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் நலன் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.  அது முக்கியமானது. 


ஒரு வேளை எனக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவருடன் பேசும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் நான் இதுகுறித்துப் பேசுவேன். பிரதமர் மோடியை எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் பேசும்போது, இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், ஒரு கட்டத்தில், இந்தியா பிரிந்து போகும் அபாயம் இருப்பதை அவரிடம் தெரிவிப்பேன்.


உள்நாட்டுக்குள் மத ரீதியாக மோதல்கள் ஏற்படுவது நல்லதல்ல. சிறுபான்மை முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், பெரும்பான்மை இந்து இந்தியர்களும் கூட இதனால் பாதிக்கப்படுவார்கள்.  எனவே இதை நேர்மையாக எதிர்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். உலகம் மிகவும் சிக்கலானது. எனவே எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, பிரதமர் மோடியுடன் இணைந்து காலநிலை மாற்றம் தொடர்பாக நெருங்கிப் பணியாற்றினேன். பாரீஸ் ஒப்பந்தங்கள் ஏற்பட இரு தலைவர்களும் இணைந்து பணியாற்றினோம்.


சீனா குறித்து அமெரிக்கா அக்கறை காட்ட வேண்டும். உய்குர் முஸ்லீம்களை சீன அரசு முகாம்களுக்கு அனுப்பி வருகிறது. இது அபாயகரமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் பராக் ஒபாமா.


பாஜக கண்டனம்


இதற்கிடையே,  பராக் ஒபாமாவின் கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பான்டா கூறுகையில், விஷமத்தனமாக பேசியுள்ளார் பராக் ஒபாமா.  இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து குரல் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் பான்டா.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்