11 கிலோ கஞ்சாவை எலி சாப்டுருச்சு..  அதிர வைத்த போலீஸ்.. விடுதலையான குற்றவாளிகள்!

Jul 04, 2023,05:01 PM IST
சென்னை: சென்னையில் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து, குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி கஞ்சா வழக்கில் கைதான இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாட்டாங்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, ஆந்திராவைச் சேர்ந்த ராஜகோபால் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். 



இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 22 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்யாமல், சிறிய அளவிலான கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக கூறியதுடன், போலீசாரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தேங்காய் தின்னும் எலியைப் பார்த்திருக்கிறோம்.. மற்ற தின் பண்டங்களைத் தின்பதையும் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கஞ்சாவைத் தின்ற எலிகள் சென்னையில் ஊடுறுவியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கஞ்சாவைத் தின்ற எலிகளுக்கு என்ன ஆனது.. அவை போதையில் என்ன செய்தன.. எங்கே போயின.. உயிருடன் இருக்கின்றனவா அல்லது செத்துப் போய் விட்டனவா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்