கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு.. மேற்குவங்க அரசு அறிவிப்பு

May 17, 2023,12:23 PM IST
கோல்கத்தா : இந்தியி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ.,யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு, தற்போது இசட் பிரிவு பாதுகாப்பாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.

கங்குலிக்கு இது நாள் வரை அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் காலாவதி ஆகி விட்டது. இதனையடுத்து அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை புதுப்பிக்கும் நடைமுறைகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பின் போது கங்குலியுடன் பாதுகாப்பிற்காக சிறப்பு பிரிவை சேர்ந்த 3 போலீஸ் செல்வார்கள். இதே போல் 3 போலீஸ் அவரது வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது இசட் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் இனி 8 முதல் 10 போலீசார் கங்குலியுடன் பாதுகாப்பிற்கு இருப்பார்கள்.



தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் கங்குலி, தனது டில்லி டேர்டெவில்ஸ் அணியுடன் பல நகரங்களுக்கும் பயணம் செய்து வருகிறார். மே 21 ம் தேதி தான் கங்குலி கோல்கத்தா திரும்புவார். அன்று முதல் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கோல்கத்தா போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தை பொறுத்த வரை தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் சி.வி.அனந்த போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.,யும் தேசிய செலாளருமான அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு மட்டுமே இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் அனைவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுடன் மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவருக்கு ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்