சென்னை : சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே திடீரென மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெப்பமும் சற்று தணிந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், இப்போதே இப்படி என்றால் கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ என சென்னைவாசிகள் புலம்பி வந்தனர். கோடை துவங்குவதற்கு முன் கோடை கால உணவுகள் போன்றவற்றிற்கு மக்கள் மாறி வந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, சென்னை விமான நிலையம், தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 10.4 மி.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இந்நிலையில் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் 23 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
மழை தீவிரமடைந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் 100 அடி சாலை பகுதியை மக்கள் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்து வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கொட்டும் மழையால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இதனால் மக்கள் செம குஷியாகி உள்ளனர்.
இந்த மழை 2 நாட்களுக்குப் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}