சென்னை : சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே திடீரென மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெப்பமும் சற்று தணிந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், இப்போதே இப்படி என்றால் கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ என சென்னைவாசிகள் புலம்பி வந்தனர். கோடை துவங்குவதற்கு முன் கோடை கால உணவுகள் போன்றவற்றிற்கு மக்கள் மாறி வந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, சென்னை விமான நிலையம், தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 10.4 மி.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இந்நிலையில் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் 23 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
மழை தீவிரமடைந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் 100 அடி சாலை பகுதியை மக்கள் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்து வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கொட்டும் மழையால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இதனால் மக்கள் செம குஷியாகி உள்ளனர்.
இந்த மழை 2 நாட்களுக்குப் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
                                                                            இந்த வாழ்க்கை ஒரு கனவா?
 
                                                                            பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
 
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
 
                                                                            பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
 
                                                                            2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
 
                                                                            Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
 
                                                                            மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
 
                                                                            நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
 
                                                                            காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}