நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு சென்ற 10 வயது சிறுவன், நாகை அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளார். அந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கட்டு விரியன் பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இந்த பாம்பு கடித்தவர்களின் தசை பகுதிகள் செயலற்றதாக்கி விடும் தன்மை கொண்டதாகும். இந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்தால் கிட்டதட்ட 1 மணி நேரத்தில் இறந்து விடுவார்களாம். மூச்சு மண்டலம் செயலிப்பதாலேயே பொதுவாக உயிர் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்த 10 வயது சிறுவன் தற்பொழுது முழு உடல் நலத்துடன் மீண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

நாகை மாவட்டம் மூகனூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 10 வயது மகன் திவாகர். மே 18ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவனின் கையில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு கடித்தது. இதில் சிறுவனின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்தன. சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை நாகையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவ குழுவினர் தீவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பூரண உடல் நலம் பெற்று சிறுவன் திவாகர் நேற்று வீடு திரும்பினார். அவனது பெற்றோர்கள் மருத்துவர்களுக்கு மனம் உறுகி நன்றி தெரிவித்தனர். கட்டு விரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு போய் தற்போது நல்ல நிலையில் உள்ள சிறுவனைப்பார்த்து மாரியப்பன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வியந்து வருகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}