சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தொழில் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இம்மாத இறுதியில் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}