டெல்லி: இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க படு காமெடியாக இருக்கிறது. அதாவது பந்து வீச வந்த பவுலர் ஒருவரை பார்த்து நாய் துரத்தியதால் அவர் பயந்து ஓடியகாட்சி அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
வந்த வேகத்தில் பின்னால் திரும்பி அந்த பந்தை நாய் மீது அடித்து விட்டு அவர் தப்பினார். நாயும் அவரை விட்டு ஓடிவிட்டது. இப்படி ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் மோகம் கொண்ட நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. இந்தியா மட்டுமல்லாமல் பக்கத்தில் இருக்கிற இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் என எல்லாமே கிரிக்கெட் மோகம் கொண்டோர் அதிகம் உள்ள நாடுதான். இங்கெல்லாம் எல்லா தெருக்களிலும் ஏதாவது ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். கிரிக்கெட் என்றால் பைத்தியமாக திரிவோர் இந்த நாடுகளில் அதிகம். கிரிக்கெட்டை ஒரு மதமாகவே பலரும் இங்கு பார்க்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் போன்றவை நடக்கும் போது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு கிரிக்கெட் முன்னாடியே திரிவோரும் இங்கு அதிகம்.

இந்த வீடியோவில் ஒரு கலகலப்பான கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிகிறது. ஒரு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு காலி கிரவுண்ட் போல தெரிகிறது. எந்த ஊருன்னு தெரியல எந்த நாடு தெரியல. ஒரு நாலு பேர் சேர்ந்து விளையாடிட்டு இருக்காங்க. அப்போ ஒரு பவுலர் பந்து வீச வருகிறார். அவர் வேகமாக ஓடி வருவதைப் பார்த்து அந்த அந்த மைதானத்தில் இருந்த நாய் ஒன்று அவரை துரத்துகிறது. உடனே அவர் பயந்து போய் பின்னால் திரும்பி ஓடுகிறார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது காமெடியாகவும் இருக்கிறது.
அந்த நாய் அவரை திரும்பத் திரும்ப துரத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனால் நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் நாய் மீது பந்தை எறிந்து தப்புகிறார். நாயும் ஓடி விட்டது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}