டெல்லி: இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க படு காமெடியாக இருக்கிறது. அதாவது பந்து வீச வந்த பவுலர் ஒருவரை பார்த்து நாய் துரத்தியதால் அவர் பயந்து ஓடியகாட்சி அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
வந்த வேகத்தில் பின்னால் திரும்பி அந்த பந்தை நாய் மீது அடித்து விட்டு அவர் தப்பினார். நாயும் அவரை விட்டு ஓடிவிட்டது. இப்படி ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் மோகம் கொண்ட நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. இந்தியா மட்டுமல்லாமல் பக்கத்தில் இருக்கிற இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் என எல்லாமே கிரிக்கெட் மோகம் கொண்டோர் அதிகம் உள்ள நாடுதான். இங்கெல்லாம் எல்லா தெருக்களிலும் ஏதாவது ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். கிரிக்கெட் என்றால் பைத்தியமாக திரிவோர் இந்த நாடுகளில் அதிகம். கிரிக்கெட்டை ஒரு மதமாகவே பலரும் இங்கு பார்க்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் போன்றவை நடக்கும் போது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு கிரிக்கெட் முன்னாடியே திரிவோரும் இங்கு அதிகம்.

இந்த வீடியோவில் ஒரு கலகலப்பான கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிகிறது. ஒரு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு காலி கிரவுண்ட் போல தெரிகிறது. எந்த ஊருன்னு தெரியல எந்த நாடு தெரியல. ஒரு நாலு பேர் சேர்ந்து விளையாடிட்டு இருக்காங்க. அப்போ ஒரு பவுலர் பந்து வீச வருகிறார். அவர் வேகமாக ஓடி வருவதைப் பார்த்து அந்த அந்த மைதானத்தில் இருந்த நாய் ஒன்று அவரை துரத்துகிறது. உடனே அவர் பயந்து போய் பின்னால் திரும்பி ஓடுகிறார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது காமெடியாகவும் இருக்கிறது.
அந்த நாய் அவரை திரும்பத் திரும்ப துரத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனால் நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் நாய் மீது பந்தை எறிந்து தப்புகிறார். நாயும் ஓடி விட்டது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}