இந்திய ராணுவத்திற்கு ஆதரவளித்து இன்று மாலை..முதல்வர் தலைமையில் ஒற்றுமை பேரணி..!

May 10, 2025,11:39 AM IST

சென்னை: பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 5 மணிக்கு ஒற்றுமை பேரணி நடைபெற உள்ளது. இதனால் மாலை 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.


இந்த நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒற்றுமை பேரணி இன்று மாலை 5 மணிக்கு  நடைபெறுகிறது. சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி, போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெறுகிறது‌.இதில் முன்னாள்

படைவீரர்கள்,  அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதனால் மாலை 4 மணி முதல் மாலை 6:00 மணி வரை அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




அதன்படி, திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிசை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படையல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போல் பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம், வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். 


அண்ணா சிலையிலிருந்து வரும் எம்டிசி பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு> ஜிபி சாலை> டவர் கிளாக்> ஜிஆர்எச் பாயிண்ட்> ராயப்பேட்டை ஹை ரோடு> லாயிட்ஸ் சாலை >ஜம்புலிங்கம் தெரு> ஆர்.கே சாலை> வி.எம் தெரு, மந்தைவெளி> மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷ் சந்திப்பை அடையலாம்.


இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வாகனங்கள் மந்தவெளி R.Aபுரம் இரண்டாவது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே சாலை, அண்ணா சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.


வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 மணி முதல் இரவு 9:00 மணி வரை  தடை செய்யப்பட்டுள்ளது.


வாகனங்கள் நிறுத்துமிடம்:


1.காந்தி சிலை அருகாமையில் காமராஜர் சாலையில் பங்கேற்பாளர்களை இறக்கி விடும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, மெரினா சர்வீஸ் சாலை, லூப் சாலை, லேடி  வெல்டிங்டன் கல்லூரி,ஸ்கௌட் மைதானம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


2.பங்கேற்பாளர்களுக்காக பொதுப்பணித் துறை மைதானத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


3.விஜபி வாகனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்தொடர் மைதானத்திற்குள் நுழையலாம். 


4.பொதுவாகன ஓட்டிகள் காமராஜர் சாலையை தவிர்த்து மாற்றுப்பாதையில் தங்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

news

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்