அரசனும் நான்கு மனைவியரும்.. முதல் மனைவியால் நெகிழ்ந்த மன்னன்.. குட்டிக் கதை!

Nov 25, 2025,10:36 AM IST

- சிவ.ஆ.மலர்விழி ராஜா 

             

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. சரி வாங்க .. இன்னிக்கு ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போமா..


ஒரு வளம் மிகுந்த நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு நான்கு மனைவிகள் . நான்காவது மனைவி மேல் அவனுக்கு மிகுந்த அன்பு.  மூன்றாவது மனைவியின் மீதும் இரண்டாவது மனைவியின் மீதும் ஏகப்பிரியம். ஆனால் முதல் மனைவியை மட்டும் சரியாக கவனிக்கவில்லை.


போதிய உணவின்றி பலவீனமாய் இருந்தாள். நாட்கள் சென்றன .அரசன் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தான் . நான்காவது மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் உன்னை நேசித்தேன் . நீயும் என்னுடன் வந்துவிடு என்றான். அவள் மறுத்தாள்.

அரசன் அதிர்ந்தான் மூன்றாவது இரண்டாவது மனைவிகளும் உடன்வர மறுத்தார்கள் .


முதல் மனைவி மட்டும் தான் உடன் வருவதாக கூறினாள். அரசன் குற்ற உணர்ச்சியில் மனம் உடைந்து போனான். நாம் எல்லோருமே அந்த மனிதனைப் போலத்தான்.




நான்காவது மனைவி நம் உடல்.. அதற்கு எவ்வளவு அழகு சேர்த்தாலும் நம்முடன் வராது.

மூன்றாவது மனைவி நம் உணர்வுகள்

அவையும் ஓர் எல்லைக்கு பிறகு மாறும்.

இரண்டாவது மனைவி நம் தொடர்புகள்.

கால மாற்றங்களுக்கு உரியவை .

முதல் மனைவி நம் செய்யும் நல்ல காரியங்கள்.. நற்செயல்கள்.. நாம் செய்த புண்ணியங்கள்.. அவை மட்டுமே நம்முடன் கூட வரும்.


சரி அடுத்து ஒரு திருக்குறள் பார்ப்போமா..!


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"


திருக்குறளின் முதல் குறள்.. வள்ளுவர் மொழிந்த இந்தக் குறள் சொல்ல வருவது என்ன என்பதை இப்போது பார்க்கலாமா...!


உலக மொழிகள் அனைத்தும் "அ " என்னும் ஒளியை முதல் ஒளியாக கொண்டுள்ளன. அதுபோல் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்

கடவுளையே முதல்வனாக கொண்டுள்ளது.


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்