- சிவ.ஆ.மலர்விழி ராஜா
எல்லோரும் எப்படி இருக்கீங்க.. சரி வாங்க .. இன்னிக்கு ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போமா..
ஒரு வளம் மிகுந்த நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு நான்கு மனைவிகள் . நான்காவது மனைவி மேல் அவனுக்கு மிகுந்த அன்பு. மூன்றாவது மனைவியின் மீதும் இரண்டாவது மனைவியின் மீதும் ஏகப்பிரியம். ஆனால் முதல் மனைவியை மட்டும் சரியாக கவனிக்கவில்லை.
போதிய உணவின்றி பலவீனமாய் இருந்தாள். நாட்கள் சென்றன .அரசன் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தான் . நான்காவது மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் உன்னை நேசித்தேன் . நீயும் என்னுடன் வந்துவிடு என்றான். அவள் மறுத்தாள்.
அரசன் அதிர்ந்தான் மூன்றாவது இரண்டாவது மனைவிகளும் உடன்வர மறுத்தார்கள் .
முதல் மனைவி மட்டும் தான் உடன் வருவதாக கூறினாள். அரசன் குற்ற உணர்ச்சியில் மனம் உடைந்து போனான். நாம் எல்லோருமே அந்த மனிதனைப் போலத்தான்.

நான்காவது மனைவி நம் உடல்.. அதற்கு எவ்வளவு அழகு சேர்த்தாலும் நம்முடன் வராது.
மூன்றாவது மனைவி நம் உணர்வுகள்
அவையும் ஓர் எல்லைக்கு பிறகு மாறும்.
இரண்டாவது மனைவி நம் தொடர்புகள்.
கால மாற்றங்களுக்கு உரியவை .
முதல் மனைவி நம் செய்யும் நல்ல காரியங்கள்.. நற்செயல்கள்.. நாம் செய்த புண்ணியங்கள்.. அவை மட்டுமே நம்முடன் கூட வரும்.
சரி அடுத்து ஒரு திருக்குறள் பார்ப்போமா..!
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
திருக்குறளின் முதல் குறள்.. வள்ளுவர் மொழிந்த இந்தக் குறள் சொல்ல வருவது என்ன என்பதை இப்போது பார்க்கலாமா...!
உலக மொழிகள் அனைத்தும் "அ " என்னும் ஒளியை முதல் ஒளியாக கொண்டுள்ளன. அதுபோல் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
கடவுளையே முதல்வனாக கொண்டுள்ளது.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}