- ஸ்வர்ணலட்சுமி
ஆடி மாதமும் பழமொழிகளும்: ஆடி மாதத்தில் சுவாரஸ்யமான பழமொழிகள் இம்மாதத்தை சிறப்பிக்கும் வகையிலும் ,அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் சில பழமொழிகளை இக்கட்டுரையில் காண்போம்...
ஆடி மாதத்தில் தொடர்புடைய பழமொழிகள் பலரும் அறிந்ததே, அறியாதவர்களுக்கு இது சுவாரசியமாக இருக்கும் பார்க்கலாம் வாருங்கள் ..
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தான் அதிக பழமொழிகள் கூறப்படுகிறது .இந்த பழமொழிகள் ஆடி மாதத்தின் சிறப்பையும், பெருமையும் போற்றும் விதமாக அமைந்துள்ளது. பழமொழிகள் என்பதே காலம் காலமாக நம் முன்னோர்கள் சுருக்கமான வரிகளால் பொருள் உணர்த்துவதற்காக, சமுதாய நலனை கருத்தில் கொண்டு அறிவுக்கூர்மையுடன் கூறப்பட்டன. இந்த பழமொழிகள் ஆடி மாதத்தில் நடக்கும் நிகழ்வுகளை கூறுவதுடன், இம்மாதத்தின் பெருமையை அனைவரும் அறிவதற்காகவும், வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக கூறப்பட்டது. பழமொழிகளை எடுத்துக் கூறி வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு பொருள் விளக்கி அறிய செய்வர் .

"ஆடிப்பட்டம் தேடி விதை" ஆடி மாதத்தில் அனைத்து விவசாய பணிகளும் தொடங்குவர். ஆடியில் விதை விதைத்தால் தான் பின்வரும் காலத்தில் மழை பொழிந்து பயிர் நன்றாக வளர்ந்து மகசூல் பெருகும். வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் "ஆடி பட்டம் தேடி விதை " அல்லது" ஆடி பட்டம் தேடி நடு "என்ற பழமொழி கூறியுள்ளனர்.
"ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்" இந்தப் பழமொழி எதனைக் குறிக்கிறது என்றால் ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசினால் ஐப்பசி மாதத்தில் நல்ல மழை பொழியும் என்ற கருத்தை உணர்த்துகிறது.
"ஆடி கூழ் அமிர்தம் ஆகும் "ஆடி மாதம் அனைத்து அம்மன் கோவில்களில் அம்மனுக்கு நைவேத்தியமாக கூழ் செய்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் ஊற்றுவது வழக்கம். அந்தக் கூழ் அருந்துவதற்கு அமிர்தம் போல் இருக்கும்.
"ஆடிச் செவ்வாய் தேடி குளி அரைத்த மஞ்சள் பூசி குளி" இந்த பழமொழி ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் புனித நீராடி கிருமி நாசினியாக விளங்கும் அரைத்த மஞ்சளை பூசி குளிப்பதனால் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை விளக்குகிறது. செவ்வாய்க்கிழமை மங்களகரமானது என்பதை உணர்த்துகிறது.
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் " இந்த பழமொழி ஆடி மாதம் வீசும் பலத்த காற்றை குறிக்கிறது. ஆனால் சரியான பழமொழி யாதெனில் "ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் " என்பதே .வெயில் காலத்தில் அம்மை போன்ற நோய்கள் ஏற்படும் அது ஆடி மாதத்தில் வீசும் காற்றினால் அம்மை நோய் பறந்து விடும். இதுவே பிற்காலத்தில் ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்று பேச்சு வழக்கில் வந்தது என்று கூறப்படுகிறது.
"ஆடி பால் குடிக்காத மாப்பிள்ளையை தேடிப்பிடி", ஆடித் தேரை தேடி தரிசி ","ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடி பிடி ,"ஆடி வரிசை தேடி வரும் ",என இது போன்ற சுவாரசியமான ஆடி மாதத்து பழமொழிகள் பழக்கத்தில் உள்ளன.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}