வேரின் விசேஷம்!

Feb 03, 2026,01:17 PM IST

- பா.பானுமதி 


வேர் தன்னை வெளிப்படுத்தாது...

விழிகளுக்கு புலப்படாது... 

மொழிகளுக்கு அக படாது...

தண்டை தாங்குவதே தலையான வேலையாக கொண்டது 

இலைகளையும் கிளைகளையும் இறுக்கிப் பிடிக்கும் 

நீர் கொடுத்து நேராக்கி தேராக்கும் 

விலகி இருந்தாலும் விட்டுக் கொடுக்காது 

அடியில் அல்லல் பட்டாலும் அரவணைக்கும் 




விருச்சத்தை விருப்பமாய் பசுமையாக்கும் 

தனக்கென வாழாமல் தாங்குவதற்கென்றே வாழும் 

வண்ணங்களை  வளர்ச்சியை கொடுக்கும் 

வெளிச்சத்தை பார்க்க விட்டாலும் வாழ்வை கொடுக்கும் 

நிலத்தடியில் இருந்தாலும் உயரத்தை தரும் 

வலிமையாய் இருந்தாலும் 

பெருமைகளை தக்க வைத்துக் கொள்ளாது 

அருமையான வேர்போல் 

எத்தனையோ இவ்வுலகை இயக்குகிறது 

வேர்கள் இருப்பதால் தான் உயிர்கள் உயிர்க்கிறது 

உயர்கிறது...

பெற்றோர் மட்டும் அல்ல 

மற்றோரும் வேர்களாக விளங்குவதால் தான்...

நாம் இன்று இருக்கிறோம்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி

news

திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை

news

பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

வட்டு எழுத்து தமிழ் என்பது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்