வேரின் விசேஷம்!

Feb 03, 2026,01:17 PM IST

- பா.பானுமதி 


வேர் தன்னை வெளிப்படுத்தாது...

விழிகளுக்கு புலப்படாது... 

மொழிகளுக்கு அக படாது...

தண்டை தாங்குவதே தலையான வேலையாக கொண்டது 

இலைகளையும் கிளைகளையும் இறுக்கிப் பிடிக்கும் 

நீர் கொடுத்து நேராக்கி தேராக்கும் 

விலகி இருந்தாலும் விட்டுக் கொடுக்காது 

அடியில் அல்லல் பட்டாலும் அரவணைக்கும் 




விருச்சத்தை விருப்பமாய் பசுமையாக்கும் 

தனக்கென வாழாமல் தாங்குவதற்கென்றே வாழும் 

வண்ணங்களை  வளர்ச்சியை கொடுக்கும் 

வெளிச்சத்தை பார்க்க விட்டாலும் வாழ்வை கொடுக்கும் 

நிலத்தடியில் இருந்தாலும் உயரத்தை தரும் 

வலிமையாய் இருந்தாலும் 

பெருமைகளை தக்க வைத்துக் கொள்ளாது 

அருமையான வேர்போல் 

எத்தனையோ இவ்வுலகை இயக்குகிறது 

வேர்கள் இருப்பதால் தான் உயிர்கள் உயிர்க்கிறது 

உயர்கிறது...

பெற்றோர் மட்டும் அல்ல 

மற்றோரும் வேர்களாக விளங்குவதால் தான்...

நாம் இன்று இருக்கிறோம்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

news

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

news

மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை

news

ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!

news

ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

news

எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)

news

வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

நிறை குடம்

அதிகம் பார்க்கும் செய்திகள்