ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!

Aug 03, 2025,09:09 AM IST

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப் பெருக்கு என்று அழைக்கப்படும் பதினெட்டாம் பெருக்கு வைபவம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று கொண்டாடுவது வழக்கம். நிலங்களையும், மக்கள் வாழ்வையும் வளம் பெறச் செய்யும் தண்ணீர்த் தாய்க்கு வணக்கம் சொல்லி நன்றி சொல்லும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.




இந்த நாளில் ஆற்றங்கரையோரங்களில் படையல் இட்டு, தாலிக் கயிறுகளை மாற்றி மக்கள் இதை எழுச்சியுடன் கொண்டாடுவார்கள். குறிப்பாக காவிரி ஆறு கரைபுரண்டோடும் இந்த சமயத்தில் காவிரிக் கரையோரங்களில் ஆடிப் பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படும்.


அந்த வகையில் இன்றும் ஈரோடு, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்துக் காவிரி, கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் மக்கள் உற்சாகமாக ஆடிப் பெருக்கைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.  காவிரி ஆறு மட்டுமல்லாமல் அதன் கிளை ஆறுகள், காவிரிக் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.


சிதம்பரத்தில் உள்ள கான்சாகிப் கால்வாயிலும் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆடிப் பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர். புதுமணத் தம்பதியரும் குடும்பத்தோடு வந்து தாலிக் கயிறு மாற்றி ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.




அதேபோல  தாமிரபரணி உள்ளிட்ட பிற ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் ஆடிப் பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


திருச்சி அருகே முக்கொம்பு பகுதியில் இன்று விடுமுறை மற்றும் ஆடிப் பெருக்கு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காவிரி ஆறு தற்போது கரைபுரண்டு ஓடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


புகைப்படங்கள்: இந்திரா அய்யப்பன், சிதம்பரம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்