சென்னை: நடிகர் அர்ஜூன் தனது மகள் திருமண நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு, "எங்களது மகனை வரவேற்கிறோம்" என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி. இவருக்கும், நடிகர் அர்ஜூனின் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே, சூப்பராக நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டனர். விரைவில் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
நிச்சயதார்த்த விழாவானது சிம்பிளாக கோவிலில் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு வீட்டாரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜூனுக்கு தென்னிந்தியா முழுவதும் திரைத் துறையினர் நெருங்கியவர்களாக உள்ளதாலும், தம்பி ராமையாவும் மிகப் பிரபலமான நடிகராக இருப்பதாலும் இந்தத் திருமண விழா தென்னிந்தியத் திரையுலகின் சங்கம விழாவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மகள் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை அர்ஜூன் பகிர்ந்து பெருமிதத்துடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கடவுள் ஹனுமானின் கருணையால், அதிர்ஷ்டமும், அன்பும் எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. எங்களது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தினம். வாருங்கள் எங்கள் மகனே என்று பாசத்துடன் தனது மாப்பிள்ளை உமாபதியை மகனே என்று விளித்து மகிழ்ந்துள்ளார் அர்ஜூன்.
நாமும் வாழ்த்துவோம் .. உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜூன் இணையரை!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}