கள்ளக்குறிச்சி:சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்கு உள்ளானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். இவர் சேலத்திலிருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் சின்னசேலம் அடுத்து அமோகரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக டூவீலர் ஒன்று காரின் குறுக்கே வந்தது.
இதைப் பார்த்த ஜீவாவின் கார் நிலை தடுமாறி, சாலையின் தடுப்பு மீது மோதி விபத்திற்கு உள்ளானது. உடனே சாலையில் அருகே இருந்தவர்கள் ஓடிவந்து காரின் அருகே திரண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கிய போது தான் நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்கு உள்ளானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதில் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் காரின் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜீவா சேலத்தில் இருந்து வேறொரு காரில் சென்னை புறப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}