கள்ளக்குறிச்சி:சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்கு உள்ளானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். இவர் சேலத்திலிருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் சின்னசேலம் அடுத்து அமோகரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக டூவீலர் ஒன்று காரின் குறுக்கே வந்தது.

இதைப் பார்த்த ஜீவாவின் கார் நிலை தடுமாறி, சாலையின் தடுப்பு மீது மோதி விபத்திற்கு உள்ளானது. உடனே சாலையில் அருகே இருந்தவர்கள் ஓடிவந்து காரின் அருகே திரண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கிய போது தான் நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்கு உள்ளானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதில் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் காரின் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜீவா சேலத்தில் இருந்து வேறொரு காரில் சென்னை புறப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}