ஹைதராபாத்: தெலுங்கு உச்ச நடிகர் நாகார்ஜூனா தனது ரசிகர் ஒருவரை தள்ளி விட்டதாக வீடியோ வெளியாகி வைரலாகி, பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த ரசிகரிடம் நாகார்ஜூனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜுனா நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நாகார்ஜுனாவை சந்திப்பதற்கு முயற்சி செய்து உள்ளார். ஆனால் நாகார்ஜுனா இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் நாகார்ஜுனாவை பார்க்க வந்த துடித்த அந்த வயதான ரசிகரை தள்ளிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது நாகார்ஜுனா பார்வையில் வந்துள்ள நிலையில் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இப்படி நடந்திருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன் என ட்விட் போட்டுள்ளார்.
நடிகர் நாகார்ஜுனா:

தெலுங்கு உச்ச நடிகரான நாகார்ஜூனா, தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய முழுவதும் பல்வேறு ரசிகர்களின் அன்பை பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானதன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
கீதாஞ்சலி மற்றும் நின்னே பெல்லதாதா போன்ற படங்களில் தனது சிறப்பு நடிப்பிற்காக பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இப்படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்றவர்.
நாகர்ஜுனாவின் திருமண வாழ்க்கை:
1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி லட்சுமி ரமா நாயுடுவை மணந்தார். இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேசின் சகோதரியும் ஆவார். நாகார்ஜூனா மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு பிறந்த மகன் நாக சைத்தன்யா. இவர் ஜோஷ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையான அமலா பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் அகில் சிசிந்திரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}