சென்னை: விஜய் டிவியின் மூலமாக பிரபலமான நடிகர் புகழ் கடந்த 251 நாட்களாக தினசரி 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். வருடத்தில் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர் நடிகர் புகழ். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது பங்கினை சிறப்பாக செய்து வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவரின் விடாமுயற்சியால் வெள்ளித் திரையிலும் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல புரட்சிகளை செய்தவர். குறிப்பாக தான் உண்ணும் உணவையே அனைவரும் சாப்பிட வேண்டும். அனைவரும் சரிசமம் என்பதை வலியுறுத்தி, தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கை உணவில்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தன்னிகரற்ற மனிதனாக உயர்ந்தவர். தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் யாரும் உணவு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை செயல்படுத்தி வந்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ யார் போனாலும் சாப்பிடாமல் திரும்பி வர முடியாது. அப்படி வயிறுகளை குளிர்வித்து மகிழ்ந்தவர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவர் இறப்பு செய்தி கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். இவரின் இறுதிச் சடங்கிற்கு தமிழகமே ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியது.

இந்த சூழ்நிலையில் நடிகர் புகழ் பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் 251 வது நாளை அது எட்டியுள்ளது.
ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும். அது ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளேன்.வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த தன்னுடைய வெற்றிக்கு மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாக நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}