சென்னை: விஜய் டிவியின் மூலமாக பிரபலமான நடிகர் புகழ் கடந்த 251 நாட்களாக தினசரி 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். வருடத்தில் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர் நடிகர் புகழ். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது பங்கினை சிறப்பாக செய்து வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவரின் விடாமுயற்சியால் வெள்ளித் திரையிலும் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல புரட்சிகளை செய்தவர். குறிப்பாக தான் உண்ணும் உணவையே அனைவரும் சாப்பிட வேண்டும். அனைவரும் சரிசமம் என்பதை வலியுறுத்தி, தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கை உணவில்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தன்னிகரற்ற மனிதனாக உயர்ந்தவர். தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் யாரும் உணவு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை செயல்படுத்தி வந்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ யார் போனாலும் சாப்பிடாமல் திரும்பி வர முடியாது. அப்படி வயிறுகளை குளிர்வித்து மகிழ்ந்தவர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவர் இறப்பு செய்தி கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். இவரின் இறுதிச் சடங்கிற்கு தமிழகமே ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியது.

இந்த சூழ்நிலையில் நடிகர் புகழ் பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் 251 வது நாளை அது எட்டியுள்ளது.
ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும். அது ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளேன்.வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த தன்னுடைய வெற்றிக்கு மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாக நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}