நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்தான்.. ராகவா லாரன்ஸ் பளிச் பேச்சு!

May 07, 2024,05:17 PM IST

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்.


நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சேவை கடவுள் என்ற  அறக்கட்டளையை கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளார் .

இந்த அறக்கட்டளையின் மூலமாக ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில் டிராக்டர் வாங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 ஏழை விவசாயிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. 




முன்னதாக ராகவா லாரன்ஸ்க்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அவரோடு ஊர் மக்கள் அனைவரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


இந்த டிராக்டர் கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,


விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன்.இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் தெரிவித்தார்.


நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, 


நடிகர் விஜய் எதை செய்தாலும் அதை சரியாக செய்வார். அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம்.மக்கள் நடிகர் விஜயிடம் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். விஜயும் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். மேலும்  ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்