திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

Oct 23, 2025,06:08 PM IST

சென்னை: திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது என்று ரசிகர் ஒருவர் அடித்த கமண்டிற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் சூரி.


காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் நாயகனாக நடித்த விடுதலை, கருடன் , மாமன் படங்கள்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளன. அது மட்டுமின்றி இவர் நடித்த கொட்டுக்காமி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. இதனையடுத்து தற்போது இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.




நடிகர் சூரி மதுரையில் இருக்கும் ராஜாக்கூர் கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இந்த தீபாவளிக்கு தன் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி' எனக் குறிப்பிட்டு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 


அதில், ஒருவர் திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என பதவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சூரி பதில் அளித்திருப்பது அனைவரது கனவத்தையும் பெற்றுள்ளது. சூரி அளித்த பதிலில், திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் என பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்