திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

Oct 23, 2025,06:08 PM IST

சென்னை: திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது என்று ரசிகர் ஒருவர் அடித்த கமண்டிற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் சூரி.


காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் நாயகனாக நடித்த விடுதலை, கருடன் , மாமன் படங்கள்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளன. அது மட்டுமின்றி இவர் நடித்த கொட்டுக்காமி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. இதனையடுத்து தற்போது இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.




நடிகர் சூரி மதுரையில் இருக்கும் ராஜாக்கூர் கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இந்த தீபாவளிக்கு தன் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி' எனக் குறிப்பிட்டு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 


அதில், ஒருவர் திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என பதவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சூரி பதில் அளித்திருப்பது அனைவரது கனவத்தையும் பெற்றுள்ளது. சூரி அளித்த பதிலில், திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் என பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்