"அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை.. பாஜக பூஜ்ஜியம் தான்".. எஸ் வி சேகர் தாக்கு

Sep 28, 2023,08:49 AM IST

சென்னை: அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் வரை இங்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


நடிகரும், தீவிர பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு  எஸ்.வி.சேகர் பதிலளிக்கையில், 




பாஜக கூட்டணியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அதிமுக வெளியேறி இருக்கிறது.  இதில் மத்தியில் உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். ஹாட்ரிக் முறையில் மூன்றாவது முறையாக பிரதமராக வெற்றி பெறுவது உறுதி. 


இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் உதவுவது கிடையாது. அண்ணாமலை அதிமுக கூட்டணி தலைவர்களை தவறுதலாக பேசியுள்ளார். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் என்பதே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாட்டில் பாஜக தலைவராக நியமித்தது தவறு. அண்ணாமலையால் தான் இந்த கூட்டணி முறிந்தது. 


பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார். இவர் ஐபிஎஸ் படிக்காமல் இருந்திருக்கலாம். இந்த வாய்ப்பு திறமை வாய்ந்த வேறு யாருக்காவது உதவி இருக்கும். அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம் தான்.


தேர்தல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட  ஒரு கூட்டணி. எண்ணிக்கை மட்டுமே போதும். ஆளுங்கட்சி மாநிலத்தில் செய்யக்கூடிய நன்மையே ஓட்டு வங்கியாக மாறும். இதனைத் தாண்டி நன்மை செய்து மக்களிடம் கொண்டு போக வேண்டும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பிரதமராக வருவார் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்