சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து தன்னிடம் யாரும் கேள்வி எழுப்பாதீர்கள் என நடிகை ஆண்ட்ரியா ஆவேசமாக பேசியுள்ளார்.
ஹேமா கமிஷனால் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்து மலையாளத் திரையுலகையே புரட்டிப்போட்டு விட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு நடிகர்களும் இயக்குனர்களும் சிக்கி வருவது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து Amma- தலைவர் பதவியிலிருந்து இருந்து நடிகர் மோகன் நான் பதவி விலகி இருப்பது நினைவிருக்கலாம். இந்த ஹேமா கமிஷன் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தித்தியது.

இது குறித்து பல்வேறு பிரபலங்களிடம் கேள்வி எழுப்பப்பட்ட வந்தது. ஆனால் இதற்குப் பதில் அளிக்காமல் பலரும் கழுவுற மீனில் நழுவுற மீன்களாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஏற்கனவே ரஜினிகாந்த், ஜீவா, கார்த்தி, ஆகியோரிடம் விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் எனக்குத் தெரியாது என்று கூறி விட்டார். ஜீவா கோபாவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகை ராதிகா மட்டுமே பகிரங்கமாக இதுகுறித்து விவாதித்து வருகிறார். பல்வேறு கோரிக்கைகளையும் தொடர்ந்து அவர் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது கடை திறப்பு விழாவில் ஆண்ட்ரியா கூறியதாவது:
.jpg)
நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று.இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது.ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவிடம் ஹேமா கமிஷன் பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றி ஒரு நிரூபர் கேள்வி எழுப்பினார் .அதற்கு அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}