சென்னை: நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இன்று அவர் புழல் மகளிர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சென்னையில் நடந்த பிராமணர்கள் அமைப்பின் போராட்டத்தில் கலந்து கொண்டு கஸ்தூரி பேசும்போது சர்ச்சைக்கிடமான கருத்துக்களைக் கூறியதாக அவர் மீது பல்வேறு ஊர்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவருக்கு முன்ஜாமினும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் தங்கியிருந்த கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தயாளன், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி தினசரி காலை 10 மணிக்கு அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
இதையடுத்து ஜாமின் தொடர்பான ஆவணங்களை கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர் இன்று சென்னை புழல் மகளிர் சிறையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து கஸ்தூரி விடுவிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
{{comments.comment}}