ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

Nov 21, 2024,06:22 PM IST

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இன்று அவர் புழல் மகளிர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


சென்னையில் நடந்த பிராமணர்கள் அமைப்பின் போராட்டத்தில் கலந்து கொண்டு கஸ்தூரி பேசும்போது சர்ச்சைக்கிடமான கருத்துக்களைக் கூறியதாக அவர் மீது பல்வேறு ஊர்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவருக்கு முன்ஜாமினும் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் ஹைதராபாத்தில் தங்கியிருந்த கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 




சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தயாளன், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி தினசரி காலை 10 மணிக்கு அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.


இதையடுத்து ஜாமின் தொடர்பான ஆவணங்களை கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர் இன்று சென்னை புழல் மகளிர் சிறையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து கஸ்தூரி விடுவிக்கப்பட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்