சென்னை: கடந்த சில மாதங்களாகவே எமோஷனலாகவும், தனிப்பட்ட முறையிலும் பல சவால்களை சந்தித்து வருவதால் எதிலும் பங்கு கொள்ள முடியவில்லை. கடினமான பயணம் என்றாலும் கூட விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும், தனிக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் வெளியான சூட்சும தர்ஷினி திரைப்படம் நஸ்ரியாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா கடந்த நான்கு மாதங்களாகவே அமைதியாக இருந்தார். இந்த நிலையில், தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவள். கடந்த சில மாதங்களாக மன ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் நான் போராடி வருகிறேன். அதற்கான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு போராடி வருகின்றேன். தற்பொழுது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய 30 வது பிறந்தநாள், புது வருடம், சூட்சும தர்ஷினி படத்தின் வெற்றி விழா என எந்த நிகழ்விலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னுடைய நண்பர்களுக்கும் எனக்கு என்ன ஆனது என்று விவரித்தும் சொல்லவில்லை. அவர்களுடைய தொலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் யாருக்குகேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் என்னுடய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை தங்களது படங்களில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டு முடியாமல் போனவர்களிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். சூட்சும தர்ஷினி படத்தில் எனக்கு சிறந்து நடிகைக்கான கேரள திரைப்பட கிரிட்டிக் விருது கிடைத்துள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடினமான பயணத்தில் நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன். முழுமையாக மீள இன்னும் சில நாள்கள் ஆகலாம். மீண்டு வருவதற்கு பாதை இருக்கிறது என்பதை உறுதி செய்கிறேன். உங்களின் எல்லையில்லா அன்பிற்கு நன்றி. விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன்
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
காத்திருந்த தொட்டில்
பிறவா வரம் அளிக்கும் பேரூர் பட்டீஸ்வரர்.. இன்றும் நடக்கும் 5 அதிசயங்கள்!
{{comments.comment}}