சென்னை: கடந்த சில மாதங்களாகவே எமோஷனலாகவும், தனிப்பட்ட முறையிலும் பல சவால்களை சந்தித்து வருவதால் எதிலும் பங்கு கொள்ள முடியவில்லை. கடினமான பயணம் என்றாலும் கூட விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும், தனிக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் வெளியான சூட்சும தர்ஷினி திரைப்படம் நஸ்ரியாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா கடந்த நான்கு மாதங்களாகவே அமைதியாக இருந்தார். இந்த நிலையில், தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவள். கடந்த சில மாதங்களாக மன ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் நான் போராடி வருகிறேன். அதற்கான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு போராடி வருகின்றேன். தற்பொழுது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய 30 வது பிறந்தநாள், புது வருடம், சூட்சும தர்ஷினி படத்தின் வெற்றி விழா என எந்த நிகழ்விலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னுடைய நண்பர்களுக்கும் எனக்கு என்ன ஆனது என்று விவரித்தும் சொல்லவில்லை. அவர்களுடைய தொலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் யாருக்குகேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் என்னுடய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை தங்களது படங்களில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டு முடியாமல் போனவர்களிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். சூட்சும தர்ஷினி படத்தில் எனக்கு சிறந்து நடிகைக்கான கேரள திரைப்பட கிரிட்டிக் விருது கிடைத்துள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடினமான பயணத்தில் நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன். முழுமையாக மீள இன்னும் சில நாள்கள் ஆகலாம். மீண்டு வருவதற்கு பாதை இருக்கிறது என்பதை உறுதி செய்கிறேன். உங்களின் எல்லையில்லா அன்பிற்கு நன்றி. விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}