ஃபோன் செய்வாங்க.. இப்படியெல்லாம் சொல்வாங்க.. உஷாரா இருங்க.. சனம் ஷெட்டி போட்ட வீடியோ!

Aug 28, 2024,06:47 PM IST

சென்னை: போன் நம்பர் மூலம் தன்னிடம் மோசடி நடந்ததாக நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து தொட்டா விடாது, மாயை, விலாசம், கதம் கதம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ரோலில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதன் பின்னர்  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இதன் மூலம் இவர் பிரபலமாக அறியப்பட்டார். 


இதற்கிடையே குருதிக்காலம் என்ற வெப் தொடரிலும் நடித்து அசத்தியவர்.சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சனம் செட்டி அவ்வபோது ஹாட்டான போட்டோக்களை  வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கப் பெறுவார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த வரிசையில் சமீபத்தில் ஹாட்டான உடைய அணிந்து ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.


இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தான் சந்தித்த ஒரு போன் கால் பண மோசடி குறித்து மக்களிடம் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




எனது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த நம்பரை எடுத்துப் பேசும்போது உங்க போன் நம்பர் 2 மணி நேரத்தில் டிஆக்டிவேட் ஆகும். இதுவரை இந்த நம்பரில் 25 வழக்குகள் பதிவாகியுள்ளது என கூறியுள்ளனர். இதனைக் கேட்ட உடனேயே சனம் ஷெட்டி பயத்தில் என்ன ஆச்சு ..என்ன செய்வது ..என கேட்டுள்ளார்.  அப்போது நீங்கள் மும்பையில் சிம் வாங்கி உள்ளீர்கள். அந்த சிம்மில் இருந்து நிறைய பேருக்கு ஹராஸ்மென்ட் கால்ஸ் போயிருக்கு. அதேசமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கால் பார்வேர்ட் ஆகி இருக்கு. நீங்கள் மும்பை வந்திருக்கிறீர்கள்.


அதற்கு சனம் ஷெட்டியோ நான் மும்பை வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.‌ மும்பையில் எனக்கு யாரையும் தெரியாது. இந்த ஒரு நம்பர் தவிர எனக்கு வேறு எந்த நம்பரும் தெரியாது எனக் கூறிய பின்பு, எங்களுக்கு முறையாக தகவல் கொடுங்க. நீங்க தகவல் கொடுத்தால் தான் உடனடியாக ரிப்போர்ட் பைல் பண்ணுவோம். இல்லையென்றால் உங்கள் நம்பர் போய்விடும். உங்களை கைது செய்ய வேண்டியதுதான் என பயமுறுத்தி உள்ளனர்.  அந்த சமயத்தில்தான் எனக்கு இது ஃபேக் காலாக இருக்குமோ என கிளிக் ஆச்சு என்று கூறியுள்ளார்.

 

ஒரு வேளை அவர் சுதாரிக்காமல் அந்த போன் காலில் பேசிய நபர் சொன்னதையெல்லாம் செய்திருந்தால் கண்டிப்பாக பணத்தை சுருட்டியிருப்பார்கள். இதுபோன்ற போன் கால்கள் வரும்போது கவனமாக இருங்க மக்களே.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்