நாகை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே ஓரடியம்பலம் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார். இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். இதற்காக முன்னாள் அமைச்சர் மணியன் இன்று தனது காரில் வேதாரணத்திற்கு புறப்பட்டு சென்றார்.
கார் திருப்பூண்டி- கரைநகர் இடையே வந்து கொண்டிருந்தது . அப்போது எதிர்பாராத விதமாக திடீரென காரின் குறுக்கே ஸ்கூட்டி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த கார் ஓட்டுநர் சுதாரித்து கொண்டு ஸ்கூட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வேகமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கோவிலின் மதில் சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்தது.
அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மறுபுறம் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கு குறித்து நாகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}