நாகை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே ஓரடியம்பலம் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார். இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். இதற்காக முன்னாள் அமைச்சர் மணியன் இன்று தனது காரில் வேதாரணத்திற்கு புறப்பட்டு சென்றார்.

கார் திருப்பூண்டி- கரைநகர் இடையே வந்து கொண்டிருந்தது . அப்போது எதிர்பாராத விதமாக திடீரென காரின் குறுக்கே ஸ்கூட்டி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த கார் ஓட்டுநர் சுதாரித்து கொண்டு ஸ்கூட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வேகமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கோவிலின் மதில் சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்தது.
அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மறுபுறம் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கு குறித்து நாகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}