சென்னை: அலங்காநல்லூரில் துணை முதல்வருடைய மகனின் நண்பர்கள் அமர்வதற்காக கலெக்டரை நிற்க வைத்தது நியாயமா? மன்னராட்சியின் சர்வாதிகாரம் தலை தூக்கியிருப்பதற்கு இது ஒரு சாட்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுக தலைமை கழகத்தில் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா தரப்பட்ட மக்களும் உண்மையாக போற்றக்கூடிய தலைவராக எம்ஜிஆர் இருந்துள்ளார். இது போல கருணாநிதிக்கு செய்கிறார்களா? இல்லை. என்ன திரை போட்டு மு.க.ஸ்டாலின் மூடினாலும் அதிமுகவை அழிக்கவோ மறைக்கவோ முடியாது. ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அதிமுகவின் முடிவு. போலியான வெற்றியை பெற திமுக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். இது கட்சி எடுத்த முடிவு தான். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 கொடுத்த போது 5,000 கொடுக்கலாமே என்று மு.க.ஸ்டாலின் அபோது கூறினார். தற்போது பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டாம். ரூ.2,500வது கொடுத்திருக்கலாம். ரூ.2,500 கொடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை ரூ.1000மாவது கொடுத்து இருக்கலாம்.ஆனால், அதுவும் கொடுக்காமல் பட்டை நாமம் போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்.
அலங்காநல்லூரில் துணை முதல்வருடைய மகனின் நண்பர்கள் அமர்வதற்காக கலெக்டரை நிற்க வைத்தது நியாயமா? மன்னராட்சியின் சர்வாதிகாரம் தலை தூக்கியிருப்பதற்கு இது ஒரு சாட்சி. ஒரு அமைச்சர் மரியாதைக்காக துணை முதல்வருக்கு சால்வை போடலாம். ஆனால் அவருடைய மகனுக்கு சால்வை போட என்ன அவசியம்?.
குருமூர்த்தி ஏற்கனவே என்கிட்ட பலதடவை வாங்கிக் கட்டிக் கொண்டார். குருமூர்த்தி வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}