தேர்தலைப் பார்த்து பின்வாங்கும் அதிமுக.. தகுதியற்ற எடப்பாடி பழனிச்சாமி.. அமைச்சர் பெரியகருப்பன்

Jun 18, 2024,03:20 PM IST

சென்னை:   விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்றுதான் அர்த்தம். இதைத்தான் அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனை மற்றும் மக்களவை தேர்தலில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்  ஆகியன குன்றத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.




அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், பெரியார், அண்ணா, கருணாநிதி ஊட்டிய கொள்கை உணர்வை தழைக்கச் செய்யும் காரியத்தை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். தமிழர் நலன், தமிழகத்தின் நலன் போற்றும்  இயக்கமாக திமுக இயக்கம் உள்ளது. இன்றைக்கு பிரதமர் மோடி மிகப் பெரிய நெருக்கடிக்கு காரணமாக இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கி மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கண்டவர் முதல்வர்.


75 ஆண்டு காலமாக கொள்கை பிடிப்புடன் வாழையடி வாழையாக இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது. இந்த இயக்கம் வளர்ந்தால் தமிழக இனம் பாதுகாக்கப்படும். தமிழகம் வளர்ச்சி பெறும் தொடர்ந்து நூற்றாண்டு கண்ட நாயக்கர் கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்க, கொள்கை பிடிப்புடன் இன்னும் பல ஆண்டுகள் முதல்வர் தலைமையில் இந்த இயக்கம் நல்ல அரசு தமிழகத்தை ஆள வேண்டும்.


கள்ள உறவு வைத்திருப்பவர்கள் அதனை நீட்டிக்கும் வகையில் தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடுவதில்லை எனக் கூறியுள்ளனர். அது அச்சமா அல்லது அழுத்தத்தின் காரணமாக என தெரியவில்லை. இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிச்சாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதே அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது.


அண்ணா, கருணாநிதி ஆகியவருடன் இந்த இயக்கம் முடிந்து விடும் என்று எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் காலத்திலேயே, அவருக்கு இணையாக மற்றொரு தலைவர் உருவாகி கொண்டு இருக்கிறார் என்ற எரிச்சலின் காரணமாக எதிர்க்கட்சியினர் உளறுகிறார்கள். அவர்களின் புலம்பலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை  என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்