விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்தார். பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதோ அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பல முக்கிய கட்சிகளின் கூட்டணி முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக மக்களும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியுள்ளார்.
அதன்பின்னர் தமிழகம் திரும்பிய நயினார் நகேந்திரன், விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, தற்போது சி.வி.சண்முகம் பாமக தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியுள்ளார். பாமகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சந்திப்பு நடந்துள்ளது. இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
{{comments.comment}}