விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்தார். பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதோ அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பல முக்கிய கட்சிகளின் கூட்டணி முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக மக்களும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியுள்ளார்.
அதன்பின்னர் தமிழகம் திரும்பிய நயினார் நகேந்திரன், விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, தற்போது சி.வி.சண்முகம் பாமக தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியுள்ளார். பாமகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சந்திப்பு நடந்துள்ளது. இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவலிங்கப்பூவும், கங்கை நதியும்!
சிறகுகள் இல்லாவிட்டாலும்.. சிந்தனை வானில் தடை இல்லை!
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
மங்கையர் தினமெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல இதைப் பற்றி யோசிக்கலாம் வாங்க!
மாமல்லபுரத்திலிருந்து.. பெண்களுக்கு விஜய் தரப் போகும் மெசேஜ் என்னாவா இருக்கும்?
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
{{comments.comment}}