68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

Jun 30, 2025,10:43 AM IST

மேட்டூர்:  மேட்டூர் அணையானது, 1957-க்கு பிறகு ஜூன் மாதத்தில் தனது முழுக் கொள்ளளவலான 120 அடியை எட்டியுள்ளது.


மேட்டூர் அணை 120 அடியைத் தொட்டு கடல் போல் காட்சி தருகிறது. காவிரி ஆற்றில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. 


ஜூன் மாதத்தில் அணை 120 அடியை எட்டுவது ஒரு அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.  இதற்கு முன்பு 1941, 1957  ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பிரமாண்ட அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்:




கட்டுமானப் பணிகள் தொடங்கியது: ஜூலை 20, 1925

செயல்பாட்டுக்கு வந்தது: ஆகஸ்ட் 21, 1934

மொத்த கொள்ளளவு: 95.63 டி.எம்.சி (95630 மில்லியன் கன அடி)

பயன்பாட்டுக்குரிய சேமிப்பு: 93.47 டி.எம்.சி (93470 மில்லியன் கன அடி)


அணை கட்டும் பணி தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, அதாவது 1924ம் ஆண்டு காவிரி ஆற்றில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அப்போது விநாடிக்கு 4.56 லட்சம் கன அடி நீர் என்ற அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த அதீத வெள்ளப் பெருக்குதான் மேட்டூரில் அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது.


அணை கட்டிய பிறகு பல பெரும் வெள்ளங்களை மேட்டூர் அணை சந்தித்துள்ளது. குறிப்பாக, 1961, 1977, 1981, 1989, 1991, 1993, 2005, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முக்கியமான பல வெள்ளப் பெருக்குகளை மேட்டூர் அணை சந்தித்துள்ளது.


1934-ல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த 92 ஆண்டுகளில் 2025 உட்பட 44 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதாவது கடந்த 25 ஆண்டுகளில் கணக்கெடுத்தால்,  2013, 2018, 2019, 2021, 2022, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் முழுக் கொள்ளளவை அது எட்டியுள்ளது.


ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் கடந்த 92 ஆண்டுகளில் மொத்தம் 20 முறைதான் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12க்கு முன்பு 11 முறையும், ஜூன் 12க்குப் பிறகு 61 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


2018 முதல் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியான நல்ல மழை பெய்து வருவதால் (2023 தவிர), அணை அடிக்கடி நிரம்பி வழிவதும், சரியான நேரத்தில் நீர் திறக்கப்படுவதும் டெல்டா விவசாயிகளுக்கும், நீர் மேலாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

news

அண்ணாவின் பெயரைக் கட்சி பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்: முதல்வர் முக ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா? இதோ வானிலை கொடுத்த அப்பேட்!

news

விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

news

வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

news

OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!

news

தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!

news

மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்

news

Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?

அதிகம் பார்க்கும் செய்திகள்