மேட்டூர்: மேட்டூர் அணையானது, 1957-க்கு பிறகு ஜூன் மாதத்தில் தனது முழுக் கொள்ளளவலான 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணை 120 அடியைத் தொட்டு கடல் போல் காட்சி தருகிறது. காவிரி ஆற்றில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
ஜூன் மாதத்தில் அணை 120 அடியை எட்டுவது ஒரு அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இதற்கு முன்பு 1941, 1957 ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பிரமாண்ட அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்:

கட்டுமானப் பணிகள் தொடங்கியது: ஜூலை 20, 1925
செயல்பாட்டுக்கு வந்தது: ஆகஸ்ட் 21, 1934
மொத்த கொள்ளளவு: 95.63 டி.எம்.சி (95630 மில்லியன் கன அடி)
பயன்பாட்டுக்குரிய சேமிப்பு: 93.47 டி.எம்.சி (93470 மில்லியன் கன அடி)
அணை கட்டும் பணி தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, அதாவது 1924ம் ஆண்டு காவிரி ஆற்றில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அப்போது விநாடிக்கு 4.56 லட்சம் கன அடி நீர் என்ற அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த அதீத வெள்ளப் பெருக்குதான் மேட்டூரில் அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
அணை கட்டிய பிறகு பல பெரும் வெள்ளங்களை மேட்டூர் அணை சந்தித்துள்ளது. குறிப்பாக, 1961, 1977, 1981, 1989, 1991, 1993, 2005, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முக்கியமான பல வெள்ளப் பெருக்குகளை மேட்டூர் அணை சந்தித்துள்ளது.
1934-ல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த 92 ஆண்டுகளில் 2025 உட்பட 44 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதாவது கடந்த 25 ஆண்டுகளில் கணக்கெடுத்தால், 2013, 2018, 2019, 2021, 2022, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் முழுக் கொள்ளளவை அது எட்டியுள்ளது.
ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் கடந்த 92 ஆண்டுகளில் மொத்தம் 20 முறைதான் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12க்கு முன்பு 11 முறையும், ஜூன் 12க்குப் பிறகு 61 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
2018 முதல் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியான நல்ல மழை பெய்து வருவதால் (2023 தவிர), அணை அடிக்கடி நிரம்பி வழிவதும், சரியான நேரத்தில் நீர் திறக்கப்படுவதும் டெல்டா விவசாயிகளுக்கும், நீர் மேலாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
என்றாலும் முடியும்!
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
{{comments.comment}}