68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

Jun 30, 2025,10:43 AM IST

மேட்டூர்:  மேட்டூர் அணையானது, 1957-க்கு பிறகு ஜூன் மாதத்தில் தனது முழுக் கொள்ளளவலான 120 அடியை எட்டியுள்ளது.


மேட்டூர் அணை 120 அடியைத் தொட்டு கடல் போல் காட்சி தருகிறது. காவிரி ஆற்றில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. 


ஜூன் மாதத்தில் அணை 120 அடியை எட்டுவது ஒரு அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.  இதற்கு முன்பு 1941, 1957  ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பிரமாண்ட அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்:




கட்டுமானப் பணிகள் தொடங்கியது: ஜூலை 20, 1925

செயல்பாட்டுக்கு வந்தது: ஆகஸ்ட் 21, 1934

மொத்த கொள்ளளவு: 95.63 டி.எம்.சி (95630 மில்லியன் கன அடி)

பயன்பாட்டுக்குரிய சேமிப்பு: 93.47 டி.எம்.சி (93470 மில்லியன் கன அடி)


அணை கட்டும் பணி தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, அதாவது 1924ம் ஆண்டு காவிரி ஆற்றில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அப்போது விநாடிக்கு 4.56 லட்சம் கன அடி நீர் என்ற அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த அதீத வெள்ளப் பெருக்குதான் மேட்டூரில் அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது.


அணை கட்டிய பிறகு பல பெரும் வெள்ளங்களை மேட்டூர் அணை சந்தித்துள்ளது. குறிப்பாக, 1961, 1977, 1981, 1989, 1991, 1993, 2005, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முக்கியமான பல வெள்ளப் பெருக்குகளை மேட்டூர் அணை சந்தித்துள்ளது.


1934-ல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த 92 ஆண்டுகளில் 2025 உட்பட 44 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதாவது கடந்த 25 ஆண்டுகளில் கணக்கெடுத்தால்,  2013, 2018, 2019, 2021, 2022, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் முழுக் கொள்ளளவை அது எட்டியுள்ளது.


ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் கடந்த 92 ஆண்டுகளில் மொத்தம் 20 முறைதான் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12க்கு முன்பு 11 முறையும், ஜூன் 12க்குப் பிறகு 61 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


2018 முதல் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியான நல்ல மழை பெய்து வருவதால் (2023 தவிர), அணை அடிக்கடி நிரம்பி வழிவதும், சரியான நேரத்தில் நீர் திறக்கப்படுவதும் டெல்டா விவசாயிகளுக்கும், நீர் மேலாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்