Devayani.. நீண்ட இடைவேளைக்கு பிறகு நாயகியாக தேவயானி நடிக்கும் .. நிழற்குடை!

Nov 01, 2024,03:08 PM IST

சென்னை:   90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நாயகியாக நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.


90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. சினிமா வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோலங்கள் தொடர் அனைவராலும் விருப்பி பார்க்கப்பட்டது.2018ம் ஆண்டு எழுமின் என்ற படத்தில் கதையின் நாயகியாக விவேகக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது திரில்லர் படமான நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.




தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.


தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட  கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்.




இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும்  பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் என்பதனையும். அதனால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘நிழற்குடை’ விரைவில் வெளிவர இருக்கிறது.சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘நிழற்குடை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்