Devayani.. நீண்ட இடைவேளைக்கு பிறகு நாயகியாக தேவயானி நடிக்கும் .. நிழற்குடை!

Nov 01, 2024,03:08 PM IST

சென்னை:   90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நாயகியாக நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.


90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. சினிமா வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோலங்கள் தொடர் அனைவராலும் விருப்பி பார்க்கப்பட்டது.2018ம் ஆண்டு எழுமின் என்ற படத்தில் கதையின் நாயகியாக விவேகக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது திரில்லர் படமான நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.




தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.


தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட  கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்.




இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும்  பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் என்பதனையும். அதனால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘நிழற்குடை’ விரைவில் வெளிவர இருக்கிறது.சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘நிழற்குடை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

news

இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!

news

From Devotion to the stage.. Niranjanaa's Bharatanatyam Arangetram

அதிகம் பார்க்கும் செய்திகள்