"விலகியது விலகியதுதான்".. மீண்டும் பாஜகவுடன் சேரவே மாட்டோம்.. கே.பி. முனுசாமி

Sep 28, 2023,12:51 PM IST

- மஞ்சுளாதேவி


சென்னை: பாஜக உடனான கூட்டணியில் இருந்து இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே  விலகினோம். மீண்டும் சேரவே மாட்டோம். இது உறுதி என்று அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.


கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.பி. முனுசாமி. அப்போது அவர் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.


அவரது பேட்டியிலிருந்து:


அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அதிமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் அதிமுக மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் ஆகியோர் 2 கோடி அதிமுக தொண்டர்களும் ஏகமனதாக பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் . தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.


எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த போதும் தொண்டரோடு தொண்டராகத்தான் இருப்பார். எங்கு சென்றாலும் நானும் ஒரு தொண்டர் தான் என்றுதான் பேசுவார். அப்படிப்பட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. 


ஆனால் ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொண்ட மூத்த அரசியல்  விமர்சகர்கள் நேரம் வரும்போது மீண்டும் கூட்டணி சேர்ந்து விடுவார்கள் என மக்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய திருக்குமரன் உதயநிதி ஆகியோரும், அவர்கள் நாடகம் நடிக்கிறார்கள். நேரம் வந்தால் மீண்டும் இணைவார்கள் என்றும் பேசியுள்ளனர்.  உண்மையிலிருந்து அதிமுகவிலிருந்து பாஜகவை வெளியேற்றிய உடனே திமுகவினர் பயந்துள்ளனர். அதுதான் உண்மை.


எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசிய காரணத்தால் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. கூட்டணி வைக்க மாட்டோம். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எங்களது தலைமையிலான கூட்டணியுடன்தான் சந்திப்போம். 2026 சட்டமன்ற சட்டசபை தேர்தலிலும் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். 


உண்மைக்கு மாறாக புகார்களை ,குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்ததால் தான் கூட்டணியை  முறித்தோம்.  அண்ணாமலையை தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பாஜக தேசிய தலைவர்கள் எங்களுடன் பேசினாலும் கூட மீண்டும் கூட்டணி கிடையாது .எங்களது முடிவில் மாற்றம் இருக்காது .புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலை சட்டசபை தேர்தலை சந்திப்போம். நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டே மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் எந்த முடிவையும் எடுப்போம் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்