டெல்லி: இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியதால் Air India நிறுவனத்திற்கு இந்த ஆண்டு சுமார் $600 மில்லியன் வரை கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இழப்பீடுகளைக் குறைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று விமான நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு பாகிஸ்தான் வழியாக விமானங்கள் இயக்குகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரசும் பதிலுக்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றுதான் தனது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை.
பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டதால், நமது விமானங்கள் சுற்றிப் போக வேண்டியுள்ளது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளன. மேலும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா செல்லும் இந்திய விமானங்களின் பயண நேரமும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை குறைக்க "மானிய மாதிரி" திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று Air India கோரிக்கை விடுத்துள்ளது. வான்வெளி தடை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் இந்திய ரூபாய் (சுமார் $591 மில்லியன்) இழப்பு ஏற்படும் என்று Air India மதிப்பிட்டுள்ளது.
வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியாவுக்குத்தான் அதிக பாதிப்பு. ஏனென்றால், கூடுதல் எரிபொருள் செலவு மற்றும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமம் 2022-ல் மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. வாங்கிய பிறகு பல பில்லியன் டாலர் செலவில் விமான நிறுவனத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் இருந்து விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
2023-2024 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் $520 மில்லியன் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டம் ரூ.11,387.96 கோடியிலிருந்து, 2023-24 நிதியாண்டில் ரூ.4,444.10 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் வருவாய் 23.69 சதவீதம் அதிகரித்து ரூ.38,812 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு 100 ஏர்பஸ் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது. அதில் 10 பெரிய ஏ350 விமானங்களும், 90 சிறிய ஏ320 விமானங்களும் அடங்கும். மொத்தமாக 570 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}