மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இருவரும் தங்களது ஓய்வுகளை தனிப்பட்ட முடிவாக எடுத்ததாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது தேர்வு குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அவர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் அவர் கூறினார் .
அஜித் அகர்கர் மேலும் கூறுகையில், நாங்கள் விராட் மற்றும் ரோஹித்துடன் பேசினோம். அவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் ஓய்வுகள் அணிக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரக்ள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். இருப்பினும் அவர்களது முடிவு, அவர்களாகவே எடுத்தது என்றார் அஜீத் அகர்கர்.
இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய டெஅணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்ஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்பார்க்கப்பட்ட பலரது பெயர்கள் இதில் இடம் பெறவில்லை.
ஐபிஎல் போட்டியின் நடுவில்தான் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது டெஸ்ட் ஓய்வை அறிவித்தனர். இது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
இரு வீரர்களுக்குமே 35 வயது தாண்டி விட்டது. இதுவும் கூட அவர்கள் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், இந்திய கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்கள் வசம் அணியை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதே அணியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பிசிசிஐ நினைப்பதாலும் கூட ரோஹித், விராட் கோலி விலகும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ எந்த அழுத்தமும் தரவில்லை.. அஜீத் அகர்கர் விளக்கம்
நீலகிரி, கோவையில் வெளுத்துக் கட்டும் கன மழை.. இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை
மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்: பிரதமர் மோடி!
ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை.. சுப்மன்கில் கேப்டன்.. இங்கிலாந்து டூருக்கான அணி அறிவிப்பு!
காஷ்மீரில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல்!
மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நிதி ஆயோக் கூட்டம்: இந்த மாநில முதல்வர்கள் எல்லாம் புறக்கணிச்சிருக்காங்க.. யார் யார் தெரியுமா?
கேரளாவில் துவங்கியது.. தென்மேற்கு பருவ மழை.. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவும்..!
மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துங்க.. முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!
{{comments.comment}}