விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ எந்த அழுத்தமும் தரவில்லை.. அஜீத் அகர்கர் விளக்கம்

May 25, 2025,09:46 AM IST

மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று  இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இருவரும் தங்களது ஓய்வுகளை தனிப்பட்ட முடிவாக எடுத்ததாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது தேர்வு குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அவர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் அவர் கூறினார் .


அஜித் அகர்கர் மேலும் கூறுகையில், நாங்கள் விராட் மற்றும் ரோஹித்துடன் பேசினோம். அவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் ஓய்வுகள் அணிக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரக்ள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். இருப்பினும் அவர்களது முடிவு, அவர்களாகவே எடுத்தது என்றார் அஜீத் அகர்கர்.




இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  இந்திய டெஅணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  சாய் சுதர்ஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்பார்க்கப்பட்ட பலரது பெயர்கள் இதில் இடம் பெறவில்லை. 


ஐபிஎல் போட்டியின் நடுவில்தான் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது டெஸ்ட் ஓய்வை அறிவித்தனர். இது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.


இரு வீரர்களுக்குமே 35 வயது தாண்டி விட்டது. இதுவும் கூட அவர்கள் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், இந்திய கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்கள் வசம் அணியை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதே அணியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பிசிசிஐ நினைப்பதாலும் கூட ரோஹித், விராட் கோலி விலகும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்