மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இருவரும் தங்களது ஓய்வுகளை தனிப்பட்ட முடிவாக எடுத்ததாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது தேர்வு குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அவர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் அவர் கூறினார் .
அஜித் அகர்கர் மேலும் கூறுகையில், நாங்கள் விராட் மற்றும் ரோஹித்துடன் பேசினோம். அவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் ஓய்வுகள் அணிக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரக்ள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். இருப்பினும் அவர்களது முடிவு, அவர்களாகவே எடுத்தது என்றார் அஜீத் அகர்கர்.

இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய டெஅணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்ஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்பார்க்கப்பட்ட பலரது பெயர்கள் இதில் இடம் பெறவில்லை.
ஐபிஎல் போட்டியின் நடுவில்தான் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது டெஸ்ட் ஓய்வை அறிவித்தனர். இது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
இரு வீரர்களுக்குமே 35 வயது தாண்டி விட்டது. இதுவும் கூட அவர்கள் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், இந்திய கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்கள் வசம் அணியை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதே அணியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பிசிசிஐ நினைப்பதாலும் கூட ரோஹித், விராட் கோலி விலகும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}