விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ எந்த அழுத்தமும் தரவில்லை.. அஜீத் அகர்கர் விளக்கம்

May 25, 2025,09:46 AM IST

மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று  இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இருவரும் தங்களது ஓய்வுகளை தனிப்பட்ட முடிவாக எடுத்ததாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது தேர்வு குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அவர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் அவர் கூறினார் .


அஜித் அகர்கர் மேலும் கூறுகையில், நாங்கள் விராட் மற்றும் ரோஹித்துடன் பேசினோம். அவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் ஓய்வுகள் அணிக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரக்ள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். இருப்பினும் அவர்களது முடிவு, அவர்களாகவே எடுத்தது என்றார் அஜீத் அகர்கர்.




இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.  இந்திய டெஅணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  சாய் சுதர்ஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்பார்க்கப்பட்ட பலரது பெயர்கள் இதில் இடம் பெறவில்லை. 


ஐபிஎல் போட்டியின் நடுவில்தான் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது டெஸ்ட் ஓய்வை அறிவித்தனர். இது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.


இரு வீரர்களுக்குமே 35 வயது தாண்டி விட்டது. இதுவும் கூட அவர்கள் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், இந்திய கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்கள் வசம் அணியை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதே அணியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பிசிசிஐ நினைப்பதாலும் கூட ரோஹித், விராட் கோலி விலகும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க இன்றும் உயர்வு தான்... அதுவும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

news

அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!

news

ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

news

ஆன்மீக சூழலை மேம்படுத்த.. நேர்மறை ஆற்றல் பெருக.. துளசி மாட வழிபாட்டைப் பண்ணுங்க

அதிகம் பார்க்கும் செய்திகள்