- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
அமுத ஹரி
ஆராமுத ஹரி
இராமஹரி
ஈகைஹரி
உலகளந்தஹரி
ஊழ்களையும் ஹரி
எண்ணில் ஹரி
ஏகாந்தஹரி
ஒருவனே ஹரி
ஓம்காரஹரி
அஃகும் எஃகுமே
ஹரி அடியார்
ஆழ்விணை அகற்றும் ஹரி

வாடிவாடி வந்தேன்
வடிவழகை காணவே
அமுதே ஆவியே போய்
காலாழ கண்ணநீர் கொண்டு
திருமணத்தூண் பற்றி நின்றேன்
பரந்தாமா பாவியேன் பாவம் களைந்து
நின்கழலில் கன்றென கதறுகிறேன் காகுத்தனே!
கண்ணிநுண் சிறுத்தாம்பினால்
கட்டுண்ட தாமோதரா
நாவினால் நாமம் கூறி
இன்புற்றேன் நாராயணா
அருள்வேண்டும் அடியவர் ஆனந்தம்பெறவே
அவதாரம் எடுத்துவந்த என் கோகுலகுயிலே
காத்திடுவான் என்றுமே
அன்னையின் ஆருயிர் தெய்வம்
அழகிய கண்ணன்
என்றுமே தொழும் இணையிலா பாலகன்
அன்னையர் இருவர் பெற்ற ஆராவமுதன்
கன்றுகள் மேய்ப்பவன் காத்திடுவான் என்றுமே!
சிந்தையில் புகுவானே
என்றுமே இளையவன் ஏதும் நிகரற்றவன்
குன்றம் எடுத்து குலத்தைக் காத்தவன்
தென்றலாய் திகழ்பவன் தேனாய் இனிப்பவன்
சென்று வணங்குபவர் சிந்தையில் புகுவானே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}