-ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 25 :
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
தேவகியின் மகனாக நள்ளிரவு நேரத்தில் பிறந்து, அதே இரவிலேயே ஒளிந்து வளர்ப்பதற்காக யசோதையிடம் சென்றவனே! அப்படி நீ மறைந்து வளர்ந்தாலும் உன்னை அழிப்பதற்காக கம்சன் பல தீங்குகளை விளைவித்தான். உன்னை சாதாரண சிறுவன் என எண்ணிய கம்சனின் எண்ணத்தை மாற்றி, அவனின் வயிற்றில் பயம் என்னும் தீயை மூட்டிய உயர்ந்த திருமாலே! உன்னுடைய கிடைப்பதற்கு அரிதான அருளை யாசித்து பெறுவதற்காக வந்துள்ளோம். நாங்கள் வேண்டும் அருளை நீ தந்தாய் என்றால், உன்னுடைய மனம் மகிழும் வகையில், நீ விரும்பும் வகையில் உன்னுடைய செல்வ சிறப்பு, பக்தர்களுக்காக நீ செய்த செயல்களை பாராட்டி பாடிடுவோம். உன்னுடைய பெருமைகளை போற்றி பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}