மார்கழி 25 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 25 : ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

Jan 08, 2025,04:39 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 25 :


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


தேவகியின் மகனாக நள்ளிரவு நேரத்தில் பிறந்து, அதே இரவிலேயே ஒளிந்து வளர்ப்பதற்காக யசோதையிடம் சென்றவனே! அப்படி நீ மறைந்து  வளர்ந்தாலும் உன்னை அழிப்பதற்காக கம்சன் பல தீங்குகளை விளைவித்தான். உன்னை சாதாரண சிறுவன் என எண்ணிய கம்சனின் எண்ணத்தை மாற்றி, அவனின் வயிற்றில் பயம் என்னும் தீயை மூட்டிய உயர்ந்த திருமாலே! உன்னுடைய கிடைப்பதற்கு அரிதான அருளை யாசித்து பெறுவதற்காக வந்துள்ளோம். நாங்கள் வேண்டும் அருளை நீ தந்தாய் என்றால், உன்னுடைய மனம் மகிழும் வகையில், நீ விரும்பும் வகையில் உன்னுடைய செல்வ சிறப்பு, பக்தர்களுக்காக நீ செய்த செயல்களை பாராட்டி பாடிடுவோம். உன்னுடைய பெருமைகளை போற்றி பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?

news

வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

news

CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!

news

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. கஷ்டப்பட்டு கூட்டணி சேர்ந்தும் பலனில்லையே!

news

போராடும் அதிமுக-திமுக: சீனியர்களின் தோல்விக்கு SIR காரணமா?

news

இட்டுனு வந்து இட்டுனு போறது கஷ்டம்.. தி.நகர் தொகுதியில் திரில் வெற்றியைப் பெற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!

news

Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

news

ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்