மார்கழி 25 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 25 : ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

Jan 08, 2025,04:39 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 25 :


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


தேவகியின் மகனாக நள்ளிரவு நேரத்தில் பிறந்து, அதே இரவிலேயே ஒளிந்து வளர்ப்பதற்காக யசோதையிடம் சென்றவனே! அப்படி நீ மறைந்து  வளர்ந்தாலும் உன்னை அழிப்பதற்காக கம்சன் பல தீங்குகளை விளைவித்தான். உன்னை சாதாரண சிறுவன் என எண்ணிய கம்சனின் எண்ணத்தை மாற்றி, அவனின் வயிற்றில் பயம் என்னும் தீயை மூட்டிய உயர்ந்த திருமாலே! உன்னுடைய கிடைப்பதற்கு அரிதான அருளை யாசித்து பெறுவதற்காக வந்துள்ளோம். நாங்கள் வேண்டும் அருளை நீ தந்தாய் என்றால், உன்னுடைய மனம் மகிழும் வகையில், நீ விரும்பும் வகையில் உன்னுடைய செல்வ சிறப்பு, பக்தர்களுக்காக நீ செய்த செயல்களை பாராட்டி பாடிடுவோம். உன்னுடைய பெருமைகளை போற்றி பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்