ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 08 - கீழ்வானம் வெள்ளென்று

Dec 24, 2023,07:26 AM IST

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் 30ம் நமக்கு பலவிதமான கருத்துக்களை எடுத்து சொல்கின்றன. இதில் கண்ணனின் பெருமைகளை மட்டுமின்றி இறைவனை எப்படி எல்லாம் சென்று வழிபட வேண்டும்? எந்த முறையில் சென்று வழிபட்டால் இறைவனின் அருளை பெற முடியும்? என்பதை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்குகிறார். அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பக்தியை சொல்வதாலேயே ஆண்டாளின் திருப்பாவை சிறப்பானதாக போற்றப்படுகிறது.




திருப்பாவை பாசுரம் 08 :


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


பொழுது புலர துவங்கி விட்டது. வானம் விடிய துவங்கி, எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டதை பார். நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உன்னை பார்த்து மற்றவர்களும் தூங்க சென்று விடுவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி, என்னுடன் அழைத்து வந்துள்ளேன். வாயை திறந்து தனக்குள் அனைத்தும் அடக்கம் என உலகை காட்டிய மாயவனை போற்றி பாடி, வணங்க வேண்டும். நமக்கு அருள் செய்வதற்காக ஆவளாக காத்திருக்கும் அந்த கடவுள்களுக்கு எல்லாம் மேலான கடவுளான தலைனை சென்று வணங்கிட வேண்டும்.


விளக்கம் :


கோகுலத்தின் அழகையும், அங்கு காலைப் பொழுதில் அனைவரும் எத்தனை சுறுசுறுப்பாக தங்களின் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கிய ஆண்டாள். இன்றைய பாடலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்று இறைவனை வணங்குவதை பற்றி குறிப்பிடுகிறார். நாம் தனியாக சென்று இறைவனை வணங்குவதற்கும், மற்றவர்களுடன் கூட்டமாக சென்று வணங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. கூட்டாக செய்யும் பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கூட்டாக கோவிலுக்கு செல்லும் போது ஒரே நேரத்தில் அனைவரின் மனதிலும் பக்தி மட்டுமே நிலை கொண்டிருக்கும். இதையே ஆண்டாள் இந்த பாடலில் வலியுறுத்துகிறார்.


சமீபத்திய செய்திகள்

news

2 முறை அரசாண்ட அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகள்தானா.. புதுச்சேரியில் புலம்பும் தொண்டர்கள்!

news

கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

news

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

news

மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை

news

ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!

news

ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

news

எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)

news

வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்