மாட்ரிட்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, தற்போது ஸ்பெயின் நாட்டில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாள், திமுகவினர், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் சார்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் திமுகவினர் ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தற்போது அரசு முறை சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்பெயினில் தான் தங்கியுள்ள இடத்தில், அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடன் இருந்து அண்ணாவின் படத்திற்குகு மரியாதை செலுத்தினர்.
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணி துணிக கருமம்! என்று கூறியுள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}