மாட்ரிட்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, தற்போது ஸ்பெயின் நாட்டில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாள், திமுகவினர், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் சார்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் திமுகவினர் ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தற்போது அரசு முறை சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்பெயினில் தான் தங்கியுள்ள இடத்தில், அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடன் இருந்து அண்ணாவின் படத்திற்குகு மரியாதை செலுத்தினர்.
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணி துணிக கருமம்! என்று கூறியுள்ளார்.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}