மாட்ரிட்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, தற்போது ஸ்பெயின் நாட்டில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாள், திமுகவினர், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் சார்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் திமுகவினர் ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தற்போது அரசு முறை சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்பெயினில் தான் தங்கியுள்ள இடத்தில், அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடன் இருந்து அண்ணாவின் படத்திற்குகு மரியாதை செலுத்தினர்.
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணி துணிக கருமம்! என்று கூறியுள்ளார்.
உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
கிடைக்காதவற்றை நேசிக்காதே மனமே.. Dear feelings, Please stop!
சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!
உலகம் அப்படியேதான் இருக்கிறது.. No, The World Is Not broken
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
{{comments.comment}}