அவதூறு செய்வோருக்கு பதிலளிக்காமல்.. கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.. அண்ணாமலை அட்வைஸ்

Jan 30, 2023,11:37 AM IST
சென்னை: உங்கள் கருத்தை முன்வைக்க தயாங்காதீர்கள். பகிரங்கமாக உங்களது கருத்துக்களை முன்வையுங்கள். அதேசமயம்,அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாகக் கொண்டு இயங்கி வரும் சிலருக்குப் பதில் அளித்து உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



பாஜகவிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் குறித்து பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிகவும் மோசமான போஸ்ட் போட்டு அது பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பாஜகவினரே கூட அதை கண்டித்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் இதை வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக சொல்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டு பாஜகவினர் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.

அந்த அறிக்கை விவரம்:

பலரின் தியாகத்தாலும் பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?.. விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம். ஆக்கப்பூர்வமான  விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவதூறுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். சமீபகாலமாக என் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக  அறிகிறேன். 

கட்சியின் தொண்டர்களும், தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பதில் அளிக்கத் தெரியாது என்பது பொருள் அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதைக் காட்டிலும் கடந்து செல்வதே ஆக சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்க்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்குப் பங்காற்றுங்கள். 

விஷமத்தனமான  கருத்துக்களை பரப்பி உங்களது கவனத்தை சிதறடிப்பதுதான் சமூக வலைதள பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில்அவதூறு பரப்பி வருகின்றனர். சில பத்திரிகைகள் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்குஇன்று தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பயந்தால் என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கிக் கிடக்க வேண்டியதுதான். அதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.

உங்கள் கருத்தை முன்வைக்க தயாங்காதீர். பகிரங்கமாக உங்களது கருத்துக்களை முன்வையுங்கள். அதேசமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாகக் கொண்டு இயங்கி வரும் சிலருக்குப் பதில் அளித்து உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்