அவதூறு செய்வோருக்கு பதிலளிக்காமல்.. கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.. அண்ணாமலை அட்வைஸ்

Jan 30, 2023,11:37 AM IST
சென்னை: உங்கள் கருத்தை முன்வைக்க தயாங்காதீர்கள். பகிரங்கமாக உங்களது கருத்துக்களை முன்வையுங்கள். அதேசமயம்,அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாகக் கொண்டு இயங்கி வரும் சிலருக்குப் பதில் அளித்து உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



பாஜகவிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் குறித்து பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிகவும் மோசமான போஸ்ட் போட்டு அது பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பாஜகவினரே கூட அதை கண்டித்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் இதை வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக சொல்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டு பாஜகவினர் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.

அந்த அறிக்கை விவரம்:

பலரின் தியாகத்தாலும் பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?.. விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம். ஆக்கப்பூர்வமான  விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவதூறுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். சமீபகாலமாக என் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக  அறிகிறேன். 

கட்சியின் தொண்டர்களும், தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பதில் அளிக்கத் தெரியாது என்பது பொருள் அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதைக் காட்டிலும் கடந்து செல்வதே ஆக சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்க்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்குப் பங்காற்றுங்கள். 

விஷமத்தனமான  கருத்துக்களை பரப்பி உங்களது கவனத்தை சிதறடிப்பதுதான் சமூக வலைதள பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில்அவதூறு பரப்பி வருகின்றனர். சில பத்திரிகைகள் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்குஇன்று தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பயந்தால் என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கிக் கிடக்க வேண்டியதுதான். அதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.

உங்கள் கருத்தை முன்வைக்க தயாங்காதீர். பகிரங்கமாக உங்களது கருத்துக்களை முன்வையுங்கள். அதேசமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாகக் கொண்டு இயங்கி வரும் சிலருக்குப் பதில் அளித்து உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி

news

கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

news

பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு

news

PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!

news

எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!

news

ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!

news

Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?

news

Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!

news

அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்