கோயம்பத்தூர்: இனிமேல் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன். கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ் மீட் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவைக்கு இன்று வந்த அண்ணாமலையிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றனர். ஆனால் அவர் காருக்குள் அமர்ந்திருந்த நிலையில், இனி லைப்ல விமான நிலையத்தில் பிரஸ் மீட் பண்ண மாட்டேண்ணா. எல்லாத்தையும் ஆர்டர் பண்ணப் போறோம். பாத்ரூம் போகும்போது, வெளியே வரும்போது இனி யாரும் பேச மாட்டாங்க. இனி எல்லாமே கட்சி ஆபீசில்தான் நடக்கும்.
கட்சித் தலைவர்கள் ஷெட்யூல் போட்டுக் கொடுத்திருவாங்க. எல்லாத்தையும் தலைவர்கள் சொல்வாங்க. ஏன்னா, விமானத்திலிருந்து இறங்குவோம். இங்கு ஏதாவது 2 விஷயம் நடந்திருக்கும். நமக்கு இங்க வரும்போது அது தெரியிறதில்லை. இதனால் முறைப்படி செய்யப் போறோம். எல்லாமே 24 மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துரும் என்று கூறி விட்டுக் கிளம்பிச் சென்றார் அண்ணாமலை.
விமானநிலையத்திற்கு வரும் தலைவர்களிடம் பேட்டி எடுப்பது செய்தியாளர்கள் வழக்கமாக மேற்கொள்வதுதான். இதற்காகவே ஒரு இடத்தில் கூடி இருப்பார்கள். அங்கு வந்து தலைவர்கள் பேட்டி கொடுத்து விட்டுச் செல்வார்கள். காலம் காலமாக நடப்பதுதான் இது. ஆனால் அண்ணாமலை இன்றைய பேட்டியைத் தவிர்த்தது ஏன் என்று தெரியவில்லை. அதேசமயம், இனிமேல் தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி நடக்கும் என்று அவர் கூறியுள்ளது, கோவைக்கு மட்டுமா அல்லது தமிழ்நாடு முழுமைக்குமா என்று தெரியவில்லை.
அமைச்சரவையில் அண்ணாமலைக்கு இடம் தராதது, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளது உள்பட தர்மசங்கடமான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்க்கவே அண்ணாமலை விமான நிலைய பிரஸ்மீட்டைத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம், கட்சி அலுவலகத்தில் பிரஸ் மீட் நாளை உண்டு என்று அவர் சொல்லியிருப்பதால் நாளை அண்ணாமலையிடம் கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் அளிக்கப் போகும் பதில்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}