சென்னை: திமுக அமைச்சர்களின் மீதான ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப் போவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்".. இதுதான் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு.
ஆனால் இந்த அறிவிப்பை முன்பே அவர் வெளியிட்டு விட்டார். திமுக அமைச்சரவையில் யாரெல்லாம் ஊழல் செய்துள்ளார்கள் என்பதை இணையதளம் அமைத்து வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. தற்போது அதை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப் போவதாக கூறியுள்ளார் அவர்.
திமுக அமைச்சர்களைப் பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுதான் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார் அண்ணாமலை. இருவருக்கும் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. தொடர்ந்து இருவரும் சரமாரியாக குற்றம் சாட்டி வந்தனர் . செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார்களையும் சுமத்தி வந்தார் அண்ணாமலை. அவரை சாராய அமைச்சர் என்றே அழைத்தும் வந்தார்.
அதேபோல உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோர் மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில்தான் வெப்சைட் மூலம் திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே பல்வேறு அமைச்சர்கள் மீது அவர் பல்வேறு ஊழல் புகார்களை சுமத்தியுள்ள நிலையில் ஏப்ரல் 14ம் தேதி என்ன மாதிரியான குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை வைக்கப் போகிறார்.. யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம் பெறப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}