ஹாட்டான சென்னையில்.. ஏசி மின்சார ரயில்கள்.. ஏப்ரல் முதல் பயன்பாட்டுக்கு வரும்.. தெற்கு ரயில்வே

Mar 25, 2025,12:16 PM IST

சென்னை:  சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இந்த செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகையின் அதிகரிப்பால் ரயில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவைகளை மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. 




அதன்படி ஏற்கனவே சென்னை பீச் டூ தாம்பரம் செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழித்தடங்களில் தனித்தனியான ஏசி மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் சென்னை பீச் டூ செங்கல்பட்டு, தாம்பரம் டூ சென்னை பீச் என இரண்டு சேவைகளில் கூடுதலாக 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இச்செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்