சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ள நிலையில், இன்று மாலை ரூ.960 உயர்ந்துள்ளது.
கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் காலை உயர்ந்தது. அது மட்டுமின்றி ஒரே நாளில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,044க்கும் விற்கப்பட்டு வருந்த நிலையில், தற்போது கிராமிற்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410க்கும் ஒரு சவரன் ரூ.67,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆகவும், 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆகவும் இருந்தது. தற்போது இந்த வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை தற்போது ரூ.104க்கு விற்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}