Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

Apr 09, 2025,05:45 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ள நிலையில், இன்று மாலை ரூ.960 உயர்ந்துள்ளது. 


கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் காலை உயர்ந்தது. அது மட்டுமின்றி ஒரே நாளில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,044க்கும் விற்கப்பட்டு வருந்த நிலையில், தற்போது கிராமிற்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410க்கும் ஒரு சவரன் ரூ.67,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




இன்று  காலை வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆகவும், 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆகவும் இருந்தது.  தற்போது இந்த வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை தற்போது ரூ.104க்கு விற்கப்பட்டு வருகிறது.


ஒரே நாளில் தங்கம்  விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்