சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான 29ம் ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. இது சினிமா உலகில் மற்றொரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி ஆகியோரின் விவாகரத்து வழக்குகள் ஒரு புறம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. மற்றொரு புறம் இசை துறையை சேர்ந்த இமான், ஜி.வி.பிரகாஷ் குமார் என பலரும் விவாகரத்துக்களை அடுத்தடுத்து அறிவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும் அவரை பிரிய உள்ளதாக தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகள் என படுபிஸியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், அவரது மனைவி சாய்ரா பானுவிற்கும் திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தற்போது சாய்ரா பானு விவாகரத்தை அறிவித்துள்ளார்.
சாய்ரா பானு சார்பில் அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது. தங்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு பொதுமக்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவிற்கு திரை துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}