சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான 29ம் ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. இது சினிமா உலகில் மற்றொரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி ஆகியோரின் விவாகரத்து வழக்குகள் ஒரு புறம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. மற்றொரு புறம் இசை துறையை சேர்ந்த இமான், ஜி.வி.பிரகாஷ் குமார் என பலரும் விவாகரத்துக்களை அடுத்தடுத்து அறிவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும் அவரை பிரிய உள்ளதாக தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகள் என படுபிஸியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், அவரது மனைவி சாய்ரா பானுவிற்கும் திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தற்போது சாய்ரா பானு விவாகரத்தை அறிவித்துள்ளார்.
சாய்ரா பானு சார்பில் அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது. தங்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு பொதுமக்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவிற்கு திரை துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 02, 2025... இன்று பணவரவை பெற போகும் ராசிக்காரர்கள்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
{{comments.comment}}