டெல்லி: ஆசியா கோப்பை 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகவுள்ளது. எல்லாம் சரியாக இருந்தால், 21 நாட்களில் பாகிஸ்தானுடன் நமது அணி 3 முறை மோதும் வாய்ப்புள்ளது.
ஆசியா கோப்பைத் தொடர் நடைபெறுமா என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தது. ஏனென்றால், பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததும் இரு நாடுகளுக்கு இடையே உறவை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. இதனால் இந்தியா ஆசியா கோப்பையில் பங்கேற்காது என்று செய்திகள் வந்தன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் இப்போட்டியை நடத்துகிறது. இதன் தலைவராக தற்போது பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில்தான் போட்டிக்கான அட்டவணை வெளியாகவுள்ளது. அதன்படி, ஆசியா கோப்பை 2025 செப்டம்பர் 5 (வெள்ளிக்கிழமை) தொடங்க வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கலாம். இந்த போட்டி T20 வடிவில் நடக்கும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்தது போலவே, இந்த முறையும் லீக் மற்றும் சூப்பர் ஃபோர் முறையில் நடக்கும். பாகிஸ்தானும், இந்தியாவும் சூப்பர் ஃபோருக்கு தகுதி பெற்றால், செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரண்டாவது முறை மோத வாய்ப்புள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் மற்றவர் நாட்டில் விளையாடுவதில்லை என்பதால், ஆசியா கோப்பை 2025 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடக்க வாய்ப்புள்ளது. ஆசியா கோப்பையில் இந்தியா பங்கேற்பது குறித்து BCCI விரைவில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) ஜூலை முதல் வாரத்தில் அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. அடுத்த வாரம் ஒரு முடிவு எடுக்கப்படலாம். ஆசியா கோப்பை 2025 ஆறு அணிகள் பங்கேற்கும் T20 போட்டியாக இருக்கும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் UAE ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடும்.
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}